சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, October 27, 2004

நண்பர்கள் மன்னிக்கவும்.

கடைசியாக இன்று பதிவிட்டது... தவறான ஒரு பதிவு...

தெரியாமல் வந்துவிட்டது.

during testing some code change in template, i was thinking i suppressed the atom feed. But looks like it was on. :-(


*****

இந்தப் பதிவு...  வெறுமையாக இல்லாமலிருக்க முன்னர் ஒரு நாள் எழுதப்பட்ட ஓரு பதிவினை இங்கு குறித்துவைக்கிறேன்.
--

நண்பர் பரம்ஸ் எழுதிய ஒரு பதிவிலிருந்து...!

 
நண்பர்களே, கால இயந்திரம் அது நம்முடைய அனைவரின் கனவு இயந்திரம். காலகாலமாக அறிவியல் வல்லுஞர்களின் குறிக்கோளாக இருந்த ஒன்று.

நண்பர்களே! நம்மில் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையேனும், கால இயந்திரம் பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டோம்.

கால இயந்திரம், அது நாம் விரும்பும் காலத்திற்கு கொண்டு செல்லும் இயந்திரம். என்னுடைய வாழ்க்கையில் கால இயந்திரத்தை என் கற்பனையில் இயக்கி வெற்றி கண்ட நாட்கள் ஏராளம்.

எனக்கு தேவை எல்லாம், யார் யார் எந்த எந்த கால கட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள், அதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள்!
 
  
 

கால இயந்திரம்.... நன்றி பரம்ஸ்.. சிறு பிள்ளைத் தனமாக எனக்கு கனவுகள் நிறைய....

கடல் போன்ற வீர நாராயண ஏரியில் கால் நனைக்க ஆசை...., ஆழ்வார்கடியான் நம்பி, வந்தியத்தேவனுடன், சோழ நாடு முழுவதும், ஒரு நண்பனாக சுற்றிப் பார்த்து, பின்னர் அருள்மொழி வர்மனுடன் இலங்கையும் சுற்றிப் பார்க்க ஆசை.. பூங்குழலியின் குரல் இனிமையில் ஒரு பாடல் கேட்க ஆசை....

கல்கி அறிமுகப்படுத்திய பரஞ்சோதி நாயனாரின் பாதம் தொட்டு வணங்கி நிற்க ஒர் ஆசை..

தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிந்தது போல சிறு வயதில் நானும் ஆற்று மணலில் எதையாவது புதைத்து வைத்து துப்பறிந்த காலங்கள்... ஞாபகம் வருகிறது...

வானொலியில் அன்று பிரபலமாக இருந்த வானொலி அண்ணாவின் கதையை மீண்டும் கேட்க ஆசை ...
கோகுலத்தில் அழ.வள்ளியப்பா எழுதிய கதைகளை படித்து மகிழ்ந்த எனக்கு அவர் பற்றி தெரிந்து கொள்ள ஆசை...

அரக்கு மாளிகையில் தப்பித்த பாண்டவர்களுடன் அஞ்ஞாத வாசம் காட்டில் கழித்த அந்த காலகட்டத்தில் தினசரி நிகழ்வுகள் எப்படி இருந்தன என்று அறிந்துகொள்ள ஆசை..... கூடவே சென்று ஒரு வேடுவ நண்பனாக ஒரு தினம் அந்த சகோதரர்களின் பாசப்பிணைப்பை பருகி வர ஆசை... வயத்தில் முதிர்ந்த அந்த தாயை கவனித்துக்கொண்ட பாங்கை காண ஆசை... விதுரனின் வீட்டில் வேலைக்காரனாக இருக்க ஆசை...

ரகு வம்ச திலகம் ராமர் சீதைக்கும் அதே நேரத்தில் மற்ற மூன்று சகோதரகளுக்கும் ஒரே மேடையில் நிகழ்ந்த அந்த கல்யாண வைபோகத்தை ஒரு ஓரமாக நின்று பார்க்க வேண்டும் என்று ஆசை....

கர்மவீரர் காமராஜரின் காலத்தில் அவருடன் உணர்வாலும் கொள்கையாலும் இணைந்த நல்லோரின் நடுவில் ஒரு நாள் உட்கார்ந்திருக்கும் ஆசை...

TINTIN (காமிக்ஸ்) உடன் ஒரு அட்வென்ச்சர் டிரிப் மற்றும் Famous Five உடன் ஒரு டிரிப் அடிக்கும் ஆசை...

தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் சங்கத்திலிருந்து வெள்ளம் கொண்டு போன அந்த பழைய தமிழ் நூல்கள் மீண்டும் கிடைக்க ஏதேனும் முயற்சி செய்ய முடியாதா என்று பார்க்க அந்த சங்கத் தமிழ் காலம் செல்ல ஆசை....

தமிழ் வேதம் தந்த திருவள்ளுவ பெருந்தகையின் சீடனாக மாற ஆசை ...

மணிமேகலையின் கருணை முகம் பார்த்து, அட்சயப் பாத்திரத்தில் ஒரு நாள் உணவு எடுத்துக்கொள்ள ஆசை ....

தீன் இலாஹி உருவாக்கிய அக்பரின் அரண்மனையில் அனைத்துமத விவாதங்கள் நடந்த காலத்தில் அங்கு பேசப்பட்ட கருத்துக்களை ஒரு ஓரமாக நின்று வாயில் காப்போனாக கேட்க வேண்டும் என்று ஆசை....

யோசித்தால் இன்னும் எத்தனை எத்தனையோ கனவுகள்...

-சாகரன்

posted by சாகரன் @ 10/27/2004 02:24:00 PM   3 comments
Friday, October 22, 2004
மீடியா பயாஸ்
நவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு ஒரு வீட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள், காரசாரமாக புஷ் - கெர்ரி பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர், என் எதிர் சீட்டில் புதிதாக வந்து அமர்ந்தவரைப் பார்த்து, 'என்ன சுவாமி.. நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க?' என்று கேட்க, நான் கேட்கப்பட்டவரை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். 'அப் கோர்ஸ், கெர்ரிக்குத் தான்! My point is, not that kerry is good, but bush should not come....m.. i'm also afraid, bush may come! :-(' . அவர் அதைச் சொன்ன பிறகு, எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை; இது டிபிகல் தமிழக மனப்பான்மை!

அங்கு அந்தப்பேச்சு இன்னமும் சீரியஸாக 'ஆல் மீடியாக்கள் பயாஸ்(Biosed)' - ஆக இருப்பதாகப் போய்க்கொண்டிருக்க, எனக்குள் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது. பக்கத்துச் சீட்டிலிருந்தவருக்கும் அப்படி இருந்திருக்கும் போலும்; பேச ஆரம்பித்தார்....

"எனக்கு வீரப்பனையும், விஜயகுமாரையும் நல்லாத் தெரியுங்க. வீரப்பன் ஆரம்பகாலத்தில நல்லவனாத்தான் இருந்தான். அவன் கூட எப்பவும் ஒரு 20 பேர் இருப்பானுங்க. கிரானைட் கல் குவாரி விசயமாக ரோடு போடணும்கறப்போ, நான் அவனைத்தான் கூப்பிட்டு போடச் சொல்வேன். நல்லா உழைப்பாங்க. 1 கிலோ மீட்டர் ரோடு 4 மணி நேரத்தில போட்டுடுவானுங்க. அப்புறம், எம்.ஜி.ஆரு கிரானைட்-லாம் கவர்மெண்ட் விசயமா மாத்திட்டப்புறம், அதெல்லாம் விட்டுட்டு.. வேற வேலைக்கு நாங்க வந்துட்டோம்.

வீரப்பனோட ஒரே தப்பு ஆறு மாசத்துக்கு ஒரு தபா, யானையைக் கொண்ணு, தந்தம் எடுக்கறது மட்டும்தான். அந்த பீரியட்ல, அந்த ஏரியாவுல ஜெயிச்ச எம்.எல்.ஏ, ஒரு பெரிய பங்களா அண்டர்கிரவுண்டோட கட்டி, அதை கருணாநிதியை வச்சு தொரக்க வச்சி, வீரப்பனைக் கூப்பிட்டு, யானையை கொல்றது பாவம்; நீ மரம் வெட்டு நான் காசு தர்றேன் அப்படின்னு சொல்லி திருப்பிவிட்டுட்டாரு. அது அப்படியே நாலு வருசம் ரொம்ப நல்லா ஓடிச்சு. அப்புறம், வீரப்பனை கர்னாடகா போலீஸ் பிடிச்சிடுச்சு. அப்ப இந்த எம்.எல்.ஏ சப்போர்ட்டுக்கு வரலை. கடுப்பான வீரப்பன், அங்கேர்ந்து தப்பிச்சு வந்து, அவனுக்கு துரோகம் செஞ்சவங்க அத்தனை பேரையும் போட்டு தள்ளிட்டான். அப்புறம், விடுதலைப் புலிகள் தொடர்பு அது இதுன்னு அவன் வளர்ந்துட்டது வேற விசயம்.

83-84 லோ நினைக்கிறேன், அப்ப விஜயகுமாரு சேலம் மாவட்டத்தில வேலை செஞ்சுகிட்டிருந்தாரு. எனக்கு அவர்கிட்ட நல்ல பழக்கம் இருந்தது. அவர் கூட வீரப்பனைப் பத்தி பேசியிருக்கேன். என் கிட்ட, எங்க எல்லாம் அவன் சுத்துவான் இந்த விபரமெல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டாரு. அப்புறம் ஒரு நாள், அவனை முழுசா வளைச்சுட்டாரு. அங்கேர்ந்து சி.எம்-க்கு போன் போட்டாரு. ''ஷூட் அட் சைட்' ஆர்டர் குடுங்க. அவனை உயிரோட பிடிக்க முடியாது. சரவுண்ட் பண்ணிட்டேன்...' அப்படின்னாரு. ஆனா அதுக்கு, சி.எம். கருணாநிதிகிட்டேர்ந்து வந்த பதில்...

'ரிடர்ன் டு சேலம்'!

இதைச் சொல்லி, 'என்ன தம்பி பண்றது' அப்படின்னு விஜயகுமார் எங்கிட்ட வருத்தப்பட்டாரு.

இப்ப கூட பாருங்க. சென்னையில ஒரு என்கவுண்டரில அதிமுக தாதாவை போட்டு தள்ளிட்டதினாலத்தான் ஜெயலலிதா, அவரைத் தூக்கி வீரப்பனைப் பிடிக்கப் போட்டாங்க. அவங்களுக்கும் வீரப்பனைப் பிடிக்கணும்கற எண்ணம்லாம் இல்லை. 20 வருசமா தண்ணி காட்டறவனை இவர் எங்க பிடிக்கப்போறாருன்னு நினைச்சுதான் போட்டாங்க... ஆனா இன்னிக்கி அவன் செத்தப்புறம், ஏதோ ஜெயலலிதா தான் திட்டம் போட்டு செஞ்சதுமாதிரி பந்தா விட்டுகிட்டிருக்காங்க. "

****

இராக்கூத்து

"என்னடா இப்படி இராக்கூத்து அடிக்கறாங்க." - ரமதான் மாதத்தின் இரவு நேர பகலுலகம்(!) ரியாத்தினைப் பார்த்துவிட்டு என் அப்பா சொன்னது இது.

காலையில் 5:30 க்கு எழுந்து, இரவு 9:30 - 10 மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் உள்ள அவர்களுக்கு, ரியாத்தின் வாழ்க்கை முறை அவ்வளவு சீக்கிரம் செட்டிலாகிவிடாதுதான். அதுவும் ரமதான் மாதமானதால், இரவு 8 மணியிருந்துதான் வாழ்க்கையே இங்கு ஆரம்பிக்கிறது!

ஊருக்கு வந்த 4-5 நாட்களிலேயே அவர்களுக்கு கொஞ்சம் போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன். பார்க்க என்ன இருக்கிறது. பெரிய கடைகளைப் பார்க்க வேண்டும் என்றால், இரண்டு கடை பார்த்தால் போதும். மற்ற எல்லா கடைகளும் அதேப் போலத்தான். மத்திம வயதுக்காரர்களாக இருந்தால், ஷாப்பிங்கில் கொஞ்சம் விருப்பம் இருக்கும். வயதான பிறகு, வாழ்க்கையின் பெரும்பாலான முக்கிய கடன்களை முடித்துவிட்ட பிறகு, ஷாப்பிங் போன்றவற்றிலெல்லாம் பெரிதும் விருப்பம் இருப்பதில்லை. கஷ்டம்தான்; இங்கு இருக்கும் பார்க்கக் கூடிய இடங்களில் பாதிக்கு மேல் ஷாப்பிங் மட்டுமே!

ம்... இனிமேல்தான், பார்க்குகள், மியூசியம், zoo, டெசர்ட்(desert), அல்-கோபர் பீச் போன்றவற்றிற்கு அழைத்துப்போக வேண்டும்.
posted by சாகரன் @ 10/22/2004 01:53:00 AM   1 comments
Friday, October 15, 2004
ஒரு.. தெய்வம் தந்த பூவே...
... யப்பா.. இந்த குழந்தைகள் தான் ஒரிரு மாதங்களில் என்ன வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்!! ஊருக்கு சென்று திரும்பிய என் மகள், விசமத்தனங்களிலும், முக பாவங்களிலும் நிறையவே மாறுதல்கள்.

-oOo-

வெற்றி நிச்சயம் இது கலாம் சத்தியம்!

"வாங்க டீ சாப்பிடலாம் முதல்ல.." - இந்த நண்பர், இந்தப் பக்கங்களின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டவரின் உறவினர். நிறைய பேசினோம் என்றாலும், கடைசியாக ஒன்று சொன்னார். "இந்தியாவில நான் செய்யாத லாரி ஒட்டம் இல்லை சார்... கஞ்சா முதக்கொண்டு ஒரு தடவை லாரில ஓட்டியிருக்கேன். சவுதிக்கு வந்து இப்படி, ஒரு சவுதிகாரன் குடும்பத்துக்கு டிரைவரா வேலை செய்யறப்போதான், நாம் பண்ணின தப்பும், அப்பா சொன்ன அறிவுரையெல்லாம் கேட்காமப் போனதும் உரைக்குது. இந்த அனுபவம் போதும்... இதையே மனசில வச்சி... ஊரில நிச்சயமா ஜெயிச்சிடலாம் சார்"

திரும்பும் போது, என் புத்தகக் கலெக்சனிலிருந்து எ.பி.ஜேயின் 'அக்னிச் சிறகுகள்' கேட்டு வாங்கிக்கொண்டார்!

-oOo-

சட்டென்று சோகம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலியே!

டிராவல் ஏஜெண்ட்களிடம் டீல் செய்திருக்கிறீர்களா? இருப்பதிலேயே செம கடியான ஆட்கள் என்றால் அவர்கள்தான். சரியான ஏஜெண்ட் மாட்டுவதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும், மிக மிக முக்கியம். இல்லையென்றால், கடைசி நேரத்தில் கேஷுவலாக கவுத்து விடுவார்கள்.

இந்திய டிராவல் ஏஜென்ஸி மார்க்கெட்டிற்கும், சவுதி மார்க்கெட்டிற்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் ரூல் ரூல் என்று ஏகப்பட்டது மாறடிப்பதுண்டு. ஆனால், சவுதியில் அவ்வளவு பெரிதாக பார்க்காமல் அட்ஜெஸ்ட் செய்து கொள்வதுண்டு என்று சொன்னார்கள்.

ஒன்று மட்டும் நிச்சயம். புக் செய்கின்ற கவுண்டரில் உள்ள ஏஜெண்ட்களுடன் கூட பேசிவிடலாம். ஆனால், நடுவில் ஏதாவது ஒரு ஏஜெண்ட் கோ-ஆர்டினேட்டராக மாட்டிவிட்டால் அவ்வளவுதான். ஒரு விசயம் பெயராது!

அடுத்த பத்தியில் வரும் விசயத்திற்காக.. டிராவல் ஏஜெண்ட்களிடம் மாட்டிக்கொண்டு நான் பட்ட பாடு... ம்.. சொல்லி மாளாது!

சுவாரஸ்யமான வாழ்க்கை ஆரம்பிக்கப்போகிறதென்று நினைக்கிறேன். அப்பா-அம்மா இன்று இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஒரு மாதப் பயணமாக வருகிறார்கள். இந்தப் பயணம் எப்படி இருக்கப்போகிறதென்று இன்னமும் எனக்கு நிச்சயம் இல்லை. "சே.. என்ன ஊர் இது.." என்று சொல்வார்களா 'அட.. நல்லாருக்கே' என்பார்களா? என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்:-)

உங்க அம்மா கூட எனக்கு சண்டை வந்தா அதுக்கு நீதான் காரணமா இருப்பே - என்று என் துணை வேறு, அவர்கள் பயத்தை என் மீது முன்கூட்டியே போடுகிறார்கள்! :-)

ஆஹ்..ஹா...

-oOo-

ரமதான் கரீம்

விசேச தினங்களில் 'பேமிலி சூப்பர்மார்கெட்' பக்கம் போனால், பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் பார்த்து விடலாம். நேற்று இரவு, அந்தப்பக்கம் போனபோது, பல நண்பர்களை பார்க்க முடிந்தது.

வழக்கம்போல நேற்றிரவு கோலாகலமாக(அதாவது ஸ்பெசல் பிரேயர்களுடன்) ஆரம்பித்த ரமதான் காரணமாகவும் நிறைய பேர் வந்திருந்தார்கள்.

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இடைமறித்தார் ஒருவர். கையில் ஏதோ கட்டு இருந்தது. அதைக் காட்டி, ரமதான் என்று ஆரம்பித்து ஏதோ பேசி, காசு கேட்டார்..

ஆரம்பித்து விட்டார்கள்...! இனி இந்த மாசம் முழுக்க இது போன்ற தொல்லைகள் இருக்கும்.
ரமதான் மாதம் என்றால் மட்டும் எங்கிருந்துதான் முளைப்பார்களோ என்று தெரியாது. அவ்வளவு பிச்சைக்காரர்கள் நடமாட்டம் இங்கு! சமயத்தில் வீடு தேடி வந்து கதவைத் தட்டி பிச்சைகேட்கும் பெண்களைக் கூட பார்க்கலாம். இந்த தைரியத்திற்கு காரணமும் இருக்கிறது. அது, ரமதான் மாதத்தில் வறியவர்களுக்கு உதவி செய்தால் புண்ணியம் என்ற நம்பிக்கை!

ரமதான் மாதம், சவுதியில் என்றாலே அது ஒரு தனி சுகம்தான்! வேலை ஒன்றும் பெரிதாக ஓடாது... இத்தனை நாள் நெருப்பாக செய்துகொண்டிருந்த வேலைகள்.. நீறு பூத்துப் போகும். இரவு பகலாகும். இந்த வருடமும் பெரும் வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறேன்.

போன வருடம் இதே தினத்தில், மில்லியனுக்கும் அதிகமான SMS மெசேஜ்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக செய்தி வந்தது. நான் கூட ஓரிரண்டு SMS அனுப்பியிருந்தேன். இந்த வருடம் அதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன். இமெயில்தான். (மொபைல்ல பைசா இல்லைங்கற ரகசியத்தை யாரிடமும் சொல்லப்போவதில்லை.:-) )

பி.கு: சவுதி அரேபிய SMS ஒன்றும் அவ்வளவு மலிவானதில்லை! சமயத்தில் இந்தியாவுக்கு அனுப்பும் SMS போய் சேருவதும் இல்லை!!
posted by சாகரன் @ 10/15/2004 08:34:00 AM   1 comments
Wednesday, October 06, 2004
FireWorks
திடும் திடும் என்ற தொடர் அதிரலில் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டது எனக்கு.

சில மாதங்களாக சவுதியில் இருக்கும் எல்லாருக்கும் இப்படி ஒரு எண்ணம் ஏற்படும் ஏதாவது ஒரு அதிர்வு கேட்டால்.

அதற்கு காரணம் இருக்கிறது. சமீபத்தில் ரியாத்தில் வெடித்த வெடிகுண்டுகளின் தாக்கம் அது!
சில மாதங்களுக்கு முன் தக்கசுசி பாண்டா பக்கமாக வெடித்த வெடிச் சத்தம் எங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களில் கூட அதிர்வலைகளை எழுப்பியது. 'ஏதோ எங்கோ பாம் வெடிச்சிருக்கு' என்று சாப்பிடும் சமயத்தில் வேடிக்கையாகப் பேசிவிட்டு, சிறிது நேரம் கழித்து அந்த சூப்பர் மார்க்கெட் சென்றால், எல்லாரும் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள்.. மார்கெட் மூடப்பட்டுக்கொண்டிருந்தது.

இன்று, அதிரடியாக தொடர்ச்சியாக இந்த வெடிச்சத்தம் கேட்டபோது, விசிடியில் ஓடிக்கொண்டிருந்த 'செல்லமே' படத்தின் தொடர்ச்சியைப் பற்றிக் கூடக்(!) கவலைப்படாமல், மேல் மாடிப்பக்கம் சென்றேன். அட...

அங்கே முன்னரே ஒருவர் நின்று கொண்டிருந்தார். "பாலா சார்.. என்ன சார் ஆச்சு" என்ற போது... "இங்க வா.. பயர்வொர்க்ஸ் பாரு... இந்தப்பக்கம் நல்லாத் தெரியுது!"

"அட.. பயர்வொர்க்ஸா.. .நான் என்னமோ பாம்தான் எங்கியாவது வெடிக்குதோண்ணு நினைச்சேன்... "

"நான் கூட அப்படி நினைச்சுதான் அவசரமா மாடிக்கு ஓடி வந்தேன்"

பயர்வொர்க்ஸ்... சிம்பிளீ சூப்பர்ப்.. தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடம்.. கலர் கலராக.. படம் காண்பித்துக்கொண்டிருந்தன!

சவுதியைப் பொருத்த வரை, இந்த மாதிரி வேலைகள் எல்லாம், கவர்மெண்ட் மட்டுமே செய்ய முடியும். அதுவும் காரண காரியமில்லாமல் இருக்காது. ஏதாவது ஒரு புதிய கவர்மெண்ட் பில்டிங் ஓபனிங்... அல்லது ரமதான் (போன வருடத்திலிருந்து) போன்ற நேரங்களில் மட்டுமே இது சாத்தியம். வெடி என்று சொன்னால், குட்டி குட்டியான வெங்காய வெடி கிடைக்கும். எங்க பில்டிங்கில் ஒருவர், தீபாவளி நேரங்களில் அவர் குழந்தைகளுக்கு எங்கிருந்தோ சென்று சில புது வகை வெடிகளை வாங்கி வருவார்.. இப்ப அவர் குழந்தைகள்.. இந்தியாவில் +2 படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

இன்று வெடித்த வெடிக்கு என்ன காரணம் என்று யோசித்தால், 12 வருடங்களாக கட்டப்பட்டு வரும், மெடிகல் சிடி பில்டிங் ஓபனிங் செரிமனியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

... இந்த ஓபனிங் செரிமனி தீபாவளி அன்னிக்கி வந்திருக்கக்கூடாது? அப்படியே பாத்துட்டு... பண்டிகையைக் கொண்டாடி இருக்கலாமே! :-)


****

சவுதி அரேபியாவின் புதிய இந்தியத் தூதுவர் (தமிழர்) வரவேற்பிற்காக ஒரு நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனக்கும் அழைப்பு வேண்டுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார்... 'ஆஹா.. அதுக்கென்ன, பேஷா வந்துடலாமே. புக் பண்ணி வச்சிரும்.' சொல்லிவிட்டு சில விநாடி தாமதிக்கிறேன்....., 'டிக்கெட் ரேட் 70 ரியால்' அப்படின்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டார்!

என்னது?!

"5 ஸ்டார் ஹோட்டல் இண்டர்காண்டினெண்டலில் வரவேற்பு! பப்வே சிஸ்டம்.. அதான், டிக்கெட் விலை அதிகம்... குறைந்தது 600 பேராவது வருவாங்க.."

அதிகம் யோசிக்கவேண்டியிருக்கவில்லை!

"ம்... அதெல்லாம் சரிசார்.. இண்டியன் எம்பசில நடக்கும் நினைச்சேன். ஆனால் இவ்வளவு செலவு பண்ணி...... இல்லை சார்.. நான் வரலை! "


****

"நீ வர்றியோ இல்லியோ ஒரு விசா வாங்கி வச்சிக்கயேன்... அதினால ஒண்ணும் குறைஞ்சிடாது..."

யூ.எஸ் விசா வாங்குவதற்காக இந்த அட்வைஸ் வந்து இரண்டு வாரம் இருக்கும்.... நான் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்திய ஜாப் மார்கெட் ஓஹோ வென்று இருக்கிறது. பெங்களூர் பக்கம் போய்விடலாமா என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டிருக்கிறது.
தினசரி குறைந்தது இரண்டு மெயில்கள் வருகின்றன. 6 வருடங்களுக்கு முன் விட்டு வந்த இந்திய இரவு நேர மொட்டை மாடிப் பேச்சுக்களின் சுகந்தம் மன நாசியை அவ்வப்போது நெருடிப் பார்க்கிறது... இதில் யூ.எஸ் வேறா?

கவலைப் படாதே சகோதரா.. இப்போதைக்கு விசா அவுட்..! இந்தச் சுட்டி மெயிலில் வந்து இந்த அவசரக் குழப்பத்தை வேகமாகக் கலைத்தது. இனி அடுத்த வருடம்தான். நேரம் இருக்கிறது. பொறுமையாகவே யோசிக்கலாம். இன்னமும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்..... கீதாசாரம்!
posted by சாகரன் @ 10/06/2004 01:16:00 AM   4 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER