சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, July 27, 2004
எய்ட்ஸ் என்னும் அரக்கனை எப்படி ஒழிப்பது?
தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த ஒரு பதிவும் அதற்கு பதிலளித்த நண்பர் துலாவின் பதிவும்!

எய்ட்ஸ் என்னும் அரக்கனை எப்படி ஒழிப்பது?

முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிக முக்கியம் அதற்கான சில யோசனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்....

1. திருமணப் பதிவு என்பது மிகவும் அவசியமாகி விட்ட காலம் இது.. திருமணப்பதிவின் போது ஆண் பெண் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் டெஸ்ட் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் அவசியம். அப்போது தான் ரிஜிஸ்டர் செய்யப்படும் என்று சட்டமாக்கலாம்...
 
2. எங்கெல்லாம், ரத்தம் சம்பந்தப்படுகிறது என்று யோசிக்கலாம்... உதாரணத்திற்கு சலூன்கள்... சலூன்கள் அனைத்திலும் "சுத்தீகரிக்கப்பட்ட புது பிளேடு உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் எய்ட்ஸ் தாக்கலாம்" என்ற போர்ட் எழுதப்படலாம்... பெரிய அளவில்... இதை சட்டமாக்கலாம்.

3. விபசாரத்தை அங்கீகரித்து , ஈடுபடுபவர்களை மாதம் இருமுறை எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தி அடையாள அட்டை குடுக்கலாம்.

4. எய்ட்ஸ் டெஸ்ட் எடுக்க வருபவர்களுக்கு, அந்த டெஸ்ட்டை இலவசமாக்கலாம்... எங்கே செய்து கொண்டாலும்..

4அ. வேறு டெஸ்ட்டிற்கு வந்தாலும் பிளட் டெஸ்ட் என்றால் ஹெச் அய் வி டெஸ்ட் இணைந்தது என்று சொல்லலாம்... அதனால் யாரும் தயங்க மாட்டார்கள்.. வேறு பிளட் டெஸ்ட்டிற்காக வந்ததாக கூறிக் கொள்வார்கள்.

5. புள்ளிராஜா எய்ட்ஸ் விளம்பரம் போன்ற புது யுத்தி விளம்பரங்களை அதிகப்படுத்தலாம். ஐடியா குடுப்பவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தலாம்...

6. ரத்த தானம், மருத்துவமனை போன்ற இடங்களில் இன்னும் கவனமாக இருக்கச் செய்யலாம்.

7. டிஸ்போசபிள் நீடில்ஸ் விலை குறைப்பு மேலும் உபயோகப்படுத்தலை அதிகப்படுத்தும்.

8. 11/12ம் வகுப்புகளில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பாடத்திட்டமாக்கலாம். இதைப் பரிட்சைகளில் கட்டாயக் கேள்வியாக்கலாம். அதற்காகவாவது படிப்பார்கள்....

9. அனைத்து கல்லூரிகளிலும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்.. அவர்கள் தான் நாளைய தலைமுறை...

10. பாட்டு கூத்து போன்ற கிராமப்புற நிகழ்ச்சிகளில் எய்ட்ஸ் குறித்த கருத்துக்களையும் இணைத்து அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

11. பேருந்துகளின் பின்புறம் மற்ற கருத்துக்களை விட, எய்ட்ஸ் குறித்த சுலோகன்களை எழுதச்செய்யலாம்.

12. கல்வியறிவில் பின் தங்கியவர்கள் இந்தியாவில் அதிகம்... அதனால் அவர்களை உணர்ந்து கொள்ளச் செய்ய... சினிமாவை ஒரு ஊடகமாக பயன்ப்டுத்தலாம்... கமர்சியல் படங்களின் இடைவேளையில் கமர்சியல் ஹீரோக்கள் சொல்லும் வார்த்தைகள்... சிலருக்கு....வேகமாக சென்றடையும்

13. இன்று ஆணுரை மெடிகல்ஸில் மட்டுமே கிடைக்கிறது(என்பது பலர் கருத்து..), அதை மாற்றி, எல்லா மளிகை கடைகளிளும், பெட்டிக் கடைகளிலும் விற்பனையாக்கலாம்.. வெட்கமாக இருக்கிறது அதை கேட்டு வாங்குபவர்களுக்கு என்பவர்களுக்காக ஏடிஎம் மெஷின்களுடன், ஆணுரையையும் மெஷின் மூலமாக பெறுவதற்கு ஏதேனும் கருவி கண்டுபிடிக்கலாம்...

14. தினசரிகளில் கண்டிப்பாக இது குறித்த விளம்பரம் அல்லது சுலோகன் கண்ணில் படும் இடத்தில் பதிக்கப்பட ஏற்பாடு செய்யலாம்....
 
இன்னும் யோசிக்கலாம்......

Follows , நண்பர் துலாவின் பதிவு:
 
சாகரன், அழகாக பாயிண்ட் பாயிண்டாக விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். அதையொட்டி இங்கு நான் எழுதப்போவது, அந்த விஷயங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதற்காகத்தான். குற்றம் குறை கண்டுபிடித்து சொல்வதற்காக அல்ல. 


சாகரன் wrote:

1. திருமணப் பதிவு என்பது மிகவும் அவசியமாகி விட்ட காலம் இது.. திருமணப்பதிவின் போது ஆண் பெண் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் டெஸ்ட் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் அவசியம். அப்போது தான் ரிஜிஸ்டர் செய்யப்படும் என்று சட்டமாக்கலாம்...  
 
இது தனிமனித உரிமை பிரச்சினையாகி விடும். வளர்ந்த நாடுகளிலேயே இது செய்யப்படவில்லை. அத்தோடு எல்லா திருமணங்களும் பதிவு செய்யப்படுவதில்லை. இரு வீட்டார்களும் ஒருவருக்கொருவர் மாப்பிளையையும் பெண்ணையும் சோதனை செய்து சான்றிதழ்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். இது சீக்கிரம் நகரத்தில் பழக்கமாகிவிடுமென நம்புகிறேன். 


சாகரன் wrote:

2. எங்கெல்லாம், ரத்தம் சம்பந்தப்படுகிறது என்று யோசிக்கலாம்... உதாரணத்திற்கு சலூன்கள்... சலூன்கள் அனைத்திலும் "சுத்தீகரிக்கப்பட்ட புது பிளேடு உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் எய்ட்ஸ் தாக்கலாம்" என்ற போர்ட் எழுதப்படலாம்... பெரிய அளவில்... இதை சட்டமாக்கலாம். 


இந்த சலூன் விஷயம் நம் நாட்டில்தான் அதிகம் பேசப்படுகிறது. உண்மையில் எச்ஐவி கிருமிகள் அறை வெப்பத்தில் (room tempature, 24/25 degreeக்கு மேல்) அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள்தான் உயிரோடு இருக்கும். அந்த குறைந்த காலகட்டத்தில் ஒருவருக்கு சவரம் செய்துவிட்டு அடுத்தவருக்கு செய்வது என்பது கஷ்டமான காரியம். அதுவும் முதலாமவர் கத்தியால் வெட்டப்பட்டிருக்க வேண்டும், இரண்டாமவரும் அதே கத்தியால் வெட்டு வாங்க வேண்டும். டெட்டால் உடனடியாக எச்ஐவி கிருமிகளை கொன்றுவிடும். இதே மாதிரிதான் ஊசி கேஸ¤ம். லேசாக வெந்நீரில் வைத்தாலே போதுமானது. உடனடியாக வைரஸ் செத்துவிடும். உலக முழுவதும் இந்த முறையில் எய்ட்ஸ் இதுவரை பரவியது 0.03%க்கும் குறைவுதான். இதில் போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள் கணக்கு வரவில்லை. ஒரே ஊசியை ஒருவர் மாற்றி ஒருவர் போட்டுக்கொள்வதால் எய்ட்ஸ் வந்து சாகுபவர்கள் மேற்கத்திய நாடுகளில் அதிகம். நம் நாட்டில் இன்னும் பவுடர்தான் பழக்கமென்பதால், இந்த வகை தாக்கம் ரொம்ப கம்மி. 


சாகரன் wrote:

3. விபசாரத்தை அங்கீகரித்து , ஈடுபடுபவர்களை மாதம் இருமுறை எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தி அடையாள அட்டை குடுக்கலாம். 


இதுவும் ஓரளவுக்குத்தான் உதவும். காரணம் எச்ஐவி கிருமியினால் தாக்கப்படுபவருக்கு முதல் மூன்று மாதங்கள் ரத்தத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. எந்த பரிசோதனையும், வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க முடியாது. க்ளின் சர்டிபிகேட் வாங்கி மூன்று மாதத்தில் மூவாயிரம் பேருக்கு பரப்பிவிடுவார். 


சாகரன் wrote:

5. புள்ளிராஜா எய்ட்ஸ் விளம்பரம் போன்ற புது யுத்தி விளம்பரங்களை அதிகப்படுத்தலாம். ஐடியா குடுப்பவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தலாம்... 
 
கை கொடுங்கள் சாகரன். இது அருமையான யோசனை. ஊறிப்போன பழைய விளம்பரங்களை விடுத்து புதிய புதிய விளம்பரங்களை கொண்டுவர வேண்டும். மக்களை பயமுறுத்தலாகவோ, ஜாலியாகவோ எய்ட்ஸ் பற்றி பேச வைக்க வேண்டும். 


சாகரன் wrote:

6. ரத்த தானம், மருத்துவமனை போன்ற இடங்களில் இன்னும் கவனமாக இருக்கச் செய்யலாம்.  


எனக்கு தெரிந்த வரைக்கும் இப்போது சட்டத்தில் மாற்றம் செய்தாகிவிட்டது. நம்முடைய உறவினர்களேயானாலும் நாம் நேரடியாக அவர்களுக்கு ரத்தம் கொடுக்க முடியாது. லேப்பிலிருந்து வருவதைத்தான் பயன்படுத்த வேண்டும். லேப்கள் ரத்தத்தை சோதனை செய்தே வெளியே அனுப்புகிறது. 


சாகரன் wrote:

7. டிஸ்போசபிள் நீடில்ஸ் விலை குறைப்பு மேலும் உபயோகப்படுத்தலை அதிகப்படுத்தும். 
 
மறுபடியும் ஒரு அட்டகாசமான யோசனை. என்னைக் கேட்டால் மருந்து கம்பெனிகள் டாக்டருகளுக்கு காம்ப்ளிமெண்டாய் ஏதேதோ தருவதற்கு இவைகளை தரலாம். டாக்டர்கள் அதை நோயாளிக்கு இலவசமாக பயன்படுத்தலாம். 


சாகரன் wrote:

8. 11/12ம் வகுப்புகளில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பாடத்திட்டமாக்கலாம். இதைப் பரிட்சைகளில் கட்டாயக் கேள்வியாக்கலாம். அதற்காகவாவது படிப்பார்கள்....

9. அனைத்து கல்லூரிகளிலும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்.. அவர்கள் தான் நாளைய தலைமுறை... 


கலக்கிட்டீங்க சாகரன். உங்களுடைய யோசனையிலேயே டாப் இதுதான். இப்படிப்பட்ட தைரியமான முடிவுகளைத்தான் நம்முடைய அரசாங்கம் எடுக்க வேண்டும். 


சாகரன் wrote:

10. பாட்டு கூத்து போன்ற கிராமப்புற நிகழ்ச்சிகளில் எய்ட்ஸ் குறித்த கருத்துக்களையும் இணைத்து அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம். 


எட்டு, ஒன்பது படிப்பவர்களுக்கு என்றால், பத்து படிக்காத கிராம மக்களுக்கு. சபாஸ் சாகரன். 


சாகரன் wrote:

11. பேருந்துகளின் பின்புறம் மற்ற கருத்துக்களை விட, எய்ட்ஸ் குறித்த சுலோகன்களை எழுதச்செய்யலாம்.

12. கல்வியறிவில் பின் தங்கியவர்கள் இந்தியாவில் அதிகம்... அதனால் அவர்களை உணர்ந்து கொள்ளச் செய்ய... சினிமாவை ஒரு ஊடகமாக பயன்ப்டுத்தலாம்... கமர்சியல் படங்களின் இடைவேளையில் கமர்சியல் ஹீரோக்கள் சொல்லும் வார்த்தைகள்... சிலருக்கு....வேகமாக சென்றடையும். 


இவைகள் ஏற்கனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையா? நம்முடைய கமர்சியல் ஹீரோக்கள் சும்மா வில்லனை பார்த்து சவால் விடுவதற்கு, திரைப்படத்திலேயே எய்ட்ஸ் பற்றிய வசனங்களை லாவகமாக நுழைத்து விடலாம். 

சாகரன் wrote:

13. இன்று ஆணுரை மெடிகல்ஸில் மட்டுமே கிடைக்கிறது(என்பது பலர் கருத்து..), அதை மாற்றி, எல்லா மளிகை கடைகளிளும், பெட்டிக் கடைகளிலும் விற்பனையாக்கலாம்.. வெட்கமாக இருக்கிறது அதை கேட்டு வாங்குபவர்களுக்கு என்பவர்களுக்காக ஏடிஎம் மெஷின்களுடன், ஆணுரையையும் மெஷின் மூலமாக பெறுவதற்கு ஏதேனும் கருவி கண்டுபிடிக்கலாம்... 

 மளிகைக்கடையில் ஆணுரை விற்கப்படுகிறது. ஏடிஎம் மெஷின்கள் படித்தவர்களுக்கு மட்டும்தான் உபயோகப்படும். இதே வரிசையில் இன்னும் சிந்திதால், இன்னும் நல்ல யோசனைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள். மற்றவர்களும் செய்வோம். 

- துலா

-----------
பதிவு எண்: 35
posted by சாகரன் @ 7/27/2004 02:22:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER