சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, July 26, 2004
உலா வரும் நேரம்....
உலா வரும் நேரம்....

வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சந்தோஷம்....இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் அது குறித்து நாம் நினைத்துப்பார்க்கிறோமா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. அப்படியே நினைத்துப்பார்த்தாலும் வாழ்க்கையில் அதை கொண்டுவருகிறோமா என்றால்....

பணம் சம்பாதிப்பது அல்லது சேமிப்பது என்ற விசயத்தில் நாம் கவனமாக இருந்தாலும், திட்டமிடுவதிலும் ஒழுங்காக செலவு செய்வதிலும் தவறுகிறோமோ என்று தோன்றுகிறது.

சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவரை சந்தித்தேன்... அவர் சொன்ன சில விசயங்களை இங்கு குறித்து வைப்பது நாளை எனக்கு உதவலாம்....

அவர் சொன்னது... சுற்றுலா திட்டமிடல் என்பது முக்கியமானது குடும்ப வாழ்க்கைக்கு...! கடந்த 20 வருடங்களான வாழ்க்கையில் அவர் செய்த முக்கிய காரியம் ஒவ்வொரு வருடமும் குடும்பத்தினருடன் பல இடங்களுக்கு சுற்றுலா..! இந்தியாவில் இருந்த போதும் சரி.. வெளிநாட்டில் இருந்த போதும் சரி.. அதனால் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சி கடந்த வாழ்க்கையில் நிறைவைத் தந்திருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறை, நாள் முழுவதும் வேலை வேலை என்று ஆளாய் பறக்கிறார்கள்.. அவர்களின் அந்த பரபரப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை. தன்னை நிரூபிக்கும் அவசியம் இருக்கிறது அவர்களுக்கு. அதை exploit செய்ய அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களும் தவறுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் குடும்பம் என்ற விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. சில வருடங்கள் கழிந்த பின் அவர்களின் வாழ்கையில் சந்தோஷமான தருணங்கள் என்பது குறைந்து விட்டதே என்ற எண்ணம் வரலாம்.

நான் பேசுவது வேலை செய்வதில் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் திருமணமான நண்பர்கள் குறித்து!

கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்... எந்தையும் தாயுடனும் நான்  பேசிக்கொண்டிருக்கும் இன்றும் இனிமையான் தருணங்கள் ஞாபகம் வருகிறது... சென்னையின் பரபரப்பில் ஐக்கியமாவதற்கு முன் கிராமத்தில் நாங்கள் வாழ்ந்த காலங்கள் நினைவில் நிழலாடுகின்றன. அப்பொழுது ... இரவு 8:30 மணிக்கெல்லாம் உண்வுக்கடன் முடித்து, வீட்டு வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ ஈஸிசேர்... ரேடியோ சகிதம் உட்கார்ந்து ஏதேனும் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். வருடம் ஒரு முறை குடும்பமாக எங்கேனும், சுற்றுலா சென்று வருவதும் வழக்கம்.  அது போன்ற அமைதியான காலங்கள் இன்று கிடைப்பதில்லை..

பணம் பார்க்காமல் எங்கு இருக்கிறோமோ அங்குள்ள இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு திட்டமிட்டு வருடத்தில் இருதடவையாவது குடும்பத்துடன் நாம் சென்று வருவது பின்னாளில் நினைத்துப்பார்த்து மகிழ நிச்சயம் உதவியாக இருக்கலாம்....

எத்தனை தான் சில விசயங்கள் மனதில் தோன்றினாலும் நல்ல விசயமாக மனம் ஏற்றுக்கொண்டாலும், வாழ்கையில் Implement செய்வது என்பது முடியுமா என்ற சந்தேகம் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை!!

பதிவு எண் : 33
posted by சாகரன் @ 7/26/2004 12:13:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER