சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, July 24, 2004
எப்படிப் பேசுவது?
எப்படிப் பேசுவது?

இதென்ன கேள்வி என்று மேல் பார்வைக்கு தோன்றினாலும், இது நிச்சயம் முக்கியமான கேள்விதான். 

எப்படி பேசுவது என்று நமக்கு யாரேனும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களா?

யோசித்துப்பாருங்கள். மார்க்கெட்டிங் அல்லது பிரசண்டேஷன் போன்றவற்றில் எப்படி பேசுவது என்று வேண்டுமானால் சொல்லிக்கொடுத்திருக்கக்கூடும்...! ஆனால் சாதாரணமாக பேசும் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்றோ.. அல்லது இப்படித்தான் பேச வேண்டும் என்றோ யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.அது தானாகவே தெரிய வருகிறது. பெற்றோர், நண்பர்களின் பேச்சுப் பழக்கங்கள் நம்மை அறியாமலே நம்முடையதாக மாறுகின்றன.

இணையத்தில் பெற்றோர்களின் உற்ற துணையாக இருக்கும் பேபிசெண்டர் என்ற தளத்திலிருந்து எனக்கு அடிக்கடி மெயில் வருவது வழக்கம். இந்த வார மெயிலில் என் மகளின் 16வது மாதத்திற்கான சிறப்பு கண்ணோட்டம் இருந்தது. அதில் இந்த விசயம் பற்றி அழகாகக் குறிப்பிட்டிருந்தார்கள்...

குழந்தை நம்மைப்பார்த்துதான் எல்லாம் கற்று கொள்கிறது. ஆரம்பத்தில் நன்றாக சத்தமிட்டு நம் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறது. இப்படி இருக்கும் போது அடிக்கடி அமைதியாக இந்த சின்னஞ்சிறிய பிஞ்சு வயதிலேயே திரும்பத்திரும்ப "சத்தமிடாமல் மெதுவாக பேச வேண்டும்" என்று சொல்லுவதன் மூலம், காலப்போக்கில் குழந்தையின் பேச்சு தெளிவாகவும் அழகாகவும் அமைதியாகவும் சன்னமாகவும் இனிமையாகவும் அமையும் என்று கூறுகிறது அந்தக் கட்டுரை...!

அப்படிப் பேசுகின்ற குழந்தையை எல்லோரும் விரும்புவது இயல்புதானே....!

கற்றுக்கொள்ளவேண்டியது குழந்தைகள் மட்டுமா?!


posted by சாகரன் @ 7/24/2004 01:04:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER