சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, July 25, 2004
வட்டம் புள்ளியாக...!
பெரிய வட்டம்...
காலம் புரட்டிப்போட புரிதல் நிகழ்ந்த பின்,
வட்டம் புள்ளியாக...!

மனையிடம் எதை எதிர்பார்ப்பது? இந்த கேள்வியும் இதற்கு பதில் சொல்லவும் திருமணமான பெரும்பாலானவர்கள் திணருவார்கள்... ஏன்? இது கொஞ்சம் தனிப்பட்ட கேள்வி.. பற்பல பதில்கள் தரும் கேள்வி.

இந்த கேள்வியை திருமணமாகாதவர்களிடம் கேட்டால்... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வரும்.தன் குடும்பத்தினை அனுசரிக்க வேண்டும் , தாயைப் போற்ற வேண்டும் என்பது இயல்பான ஒரு எதிர்பார்ப்பு...

ஆனால், இதே கேள்வியை திருமணமாகி சில வருடங்கள் கழிந்த பிறகு கேட்டால் பதில் சொல்ல பலர் திணருவார்கள்..! இதற்குள் அவர்களுக்கு மனைவியின் உண்மை கருத்துக்கள், எப்படி இருப்பார்கள் என்பது புரிந்திருக்கும்.

இந்த பழைய எதிர்பார்ப்பு உடைபட்டது மனதில் இன்னும் தங்கியிருப்பின், சிலர் கல்யாணம் என்பதே வேஸ்ட்.. பேச்சுலரா இருந்திருக்கலாம் என்றும் நினைக்கலாம்..!!

இன்னும் பார்த்தால், சில பல நேரங்களில் மனைவி தன் உலகில் தனித்து இருப்பதனால், உங்கள் கஷ்டம் புரிந்து கொள்ளாமல் அவர்கள் கஷ்டத்தினை மட்டுமே பேசுவதாக எண்ணவும் தோன்றும்....

இந்த விசயம் குறித்து இன்னும் நிறையவே யோசிக்கலாம் என்றாலும்...

இதில் யாரும் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை.

இதுதான் வாழ்க்கை. அனுபவித்துத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.......!


posted by சாகரன் @ 7/25/2004 12:20:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER