சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, July 21, 2004
கட்டுப்படுத்துதலும் கட்டுப்படலும்...
யாருக்கு யார் கட்டுப்பட்டவர்? இந்த கேள்வி மிகவும் கிரிடிக்கலானது மட்டுமல்ல கொஞ்சம் குழப்பமானதும் கூட...

இது குறித்து நிறையவே சிந்திக்க முடியும்...

கட்டுப்படுதல் என்பது எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறது...? இதனை யோசித்தால் இதற்கான பதில் கிடைத்துவிடலாம்.

பல நேரம் மனிதர்கள் கட்டுப்படுவதாக நடிக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுவதுண்டு.எங்கெல்லாம் கட்டுப்படுவதான நடிப்பு வருகிறது..? எவரிடமிருந்து ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது அல்லது கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதோ... அங்கெல்லாம் இந்த நடித்தலும் உடனடியாக வந்து விடுகிறது. பலர் இதனைப்புரியாமல் நமக்கு எல்லோரும் கட்டுப்படுகிறார்கள் என்ற இறுமாப்பில் இருந்துவிடக்கூடும்...

ஆனால், இது கண்டிப்பாக உடைபடும்...

எப்பொழுது இனி இவரிடமிருந்து உதவி தேவை இல்லை யென்று தோன்றுகிறதோ, எப்பொழுது தனியாக நாமே இந்த காரியத்தை செய்ய முடியும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது இந்த கட்டுப்படுதல் காணாய் போய் விடுகிறது!

இங்கே பாவம்... கட்டுப்படுத்தியவர் தான்... அவருடைய ஈகோ.. திமிர் எல்லாம் உடைபட்டுப்போகிறது.
கொஞ்சம் யோசித்தால் இதற்கான ஏராளமான உதாரணங்களை நம் வாழ்க்கையிலிருந்தே கூட நாம் எடுக்க முடியும்!!

இதனாலேயே இந்த விசயத்தை ஆழமாக யோசிக்க வேண்டி வருகிறது.

உண்மையில் யாரும் யாருக்கும் கட்டுப்பட்டவர் இல்லை. ஏன் மனைவி கூட, கணவனுக்கு கட்டுப்பட்டவர் இல்லை. வயதால் குறைவானவராவதாலும், திறமையால் குறைவானவராவதாலும் ஒருவர் கட்டுப்பட்டவர் என்று எண்ணுவதும் தவறு. அனைத்துமே மாறக்கூடியது!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்..
- இப்படிப்பட்ட செயல்களால் கட்டுப்பட்டவர்களிடம்... கட்டுப்படுதல் என்ற எண்ணம் தாண்டி அன்பு என்ற ஆழமான நட்பு ஏற்பட்டுவிடுகிறது, இது தான் உண்மையான கட்டுப்படுதலும் கட்டுப்படுத்துவதும் என்று தோன்றுகிறது; இந்தப் பிணைப்புகளில் தான் ஒருவர் பெரியவர் மற்றவர் சிறியவர் என்ற எண்ணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவானது.

வாழ்க்கை ஓட்டத்தில் இதுவும் இயல்பல்ல... வாழ்வே ஒரு நாடக மேடை.. நாமெல்லாரும் ஏதோ சில பாத்திரங்கள்... திறமைக்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல் வெவ்வேறு வேசங்கள்... சிலரிடம் கட்டுப்படுவதும், சிலரை கட்டுப்படுதலுமாக.......?!!?



posted by சாகரன் @ 7/21/2004 09:27:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER