சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, July 18, 2004
உலகிலேயே அதிகம் ஆக்ஸிடெண்ட் நடைபெறும் இடம்!
நேற்று முன் தினம், என் காருக்கு ஒரு சிறிய ஆக்ஸ்டண்ட்....
நல்ல வேளை ஒன்றும் பெரிதாக இல்லை. காரின் பின் பக்கம் பம்பர் விலகி விட்டது. அவ்வளவுதான்.

சவுதி ரூல்ஸ் பிரகாரம், பின் பக்கம் யார் மோதுகிறார்களோ அவர்கள் தான் தவறிழைத்தவர்கள்.. ஆனாலும், என் பக்கம் தான் தவறென்று தீர்ப்பாகியது. நான் மறுக்க விரும்பவில்லை. அவசரம் என்பது இப்படித்தான் பிரச்சனையைக் கொண்டு வரும். நானே கவனமாக இருந்திருக்கலாம்.

இன்று போலீஸ் ரிப்போர்ட் வாங்கி விட்டேன். இனிதான் ரிப்பேர் பற்றி முடிவு செய்யவேண்டும்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகிலேயே அதிகம் ஆக்ஸிடண்ட் நடைபெறும் இடம் : ரியாத்
இந்த தகவலை சவுதியில் தான் எங்கோ ஒரு இன்ஸூரன்ஸ் கம்பெனியின் பிரோசரில் பார்த்தேன்.
அதனால்தான் இங்கு பெர்சனல் இண்ஸூரன்ஸ் என்பது கட்டாயம்!

என்னடா கார் ஓட்ட ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆகுதே ஒண்ணும் ஆகலியே ரொம்ப நல்லா ஓட்டரோம் போல இருக்குண்ணு இப்பத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி யோசிச்சேன்.. ஹ்ம்ம்...
posted by சாகரன் @ 7/18/2004 03:04:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER