சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, July 18, 2004
அடுத்த வேலை ?!
ஒருவருக்கு அடுத்த வேலை தேடவேண்டும் என்ற உந்துதல் எப்பொழுது ஏற்படுகிறது...?

கொஞ்சம் யோசித்தால் இதற்கான பல பதில்கள் கிடைக்கக்கூடும்.

என்னுடைய சில சிந்தனைகள்...

முதலில் வேலை என்பது எப்படிப்பட்டது என்பதை விட எவ்வளவு தூரம் நமக்கு அந்த வேலை செய்வதில் ஆர்வம் இருக்கிறது என்பது முக்கியம். ஆங்கிலத்தில் மோடிவேஷன் (Motivation) என்று சொல்வார்கள். அந்த ஆர்வம் குறைந்தால் அவ்வளவுதான். போர் அடிக்க ஆரம்பித்துவிடும்.அப்புறம் என்ன வாழ்க்கையின் விரக்தி நிலை சீக்கிரமே வரப்போகுதுண்ணு அர்த்தம். இது ஒரு முக்கிய காரணம்.

மோடிவேஷன் நாமே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய விசயமா? இந்த் கேள்விக்கு பின்னர் வரலாம்...

அடுத்தபடியா, பணம்.. வாழ்வு நிலை பற்றிய கனவு. எங்க நல்ல பணம் கிடைக்கிறதோ, வாழ்க்கை நிலை உயர்வாக இருக்கிறது என்று தோன்றுகிறதோ அங்கு போகலாம் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை. என்னுடைய அமெரிக்காவில் வேலை பார்க்கும் நண்பர், அமெரிக்கா வந்தால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை என பல கம்பெனி மாறினால்தான், நாம் விரும்பும் சம்பளத்தில் பர்மெனெண்ட் பொஷிசனில் சேரமுடியும் என்று சொல்வார்...

அடுத்தது... போதும்பா இந்த் ஊரு இந்த மக்கள் என்ற நிலை. இது கொஞ்ச காலத்திற்குப் பிறகு எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று. இதற்கும் மோடிவேஷனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் இதற்கும் அலுவலகம் தாண்டி வெளி உலக வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. புலம் பெயர்ந்த பலர் இதன் காரணமாகத் தான் மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள்..!

அடுத்தது... நிச்சயமற்ற வேலை நிலை. எல்லாருக்கும், பெரும்பாலும் கணிணியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரு நிலை. இதுவும் கூட அடுத்த வேலைக்கு ரெடியா இருக்க வேண்டும் என்று தோண வைக்கிறது.

இந்த நேரத்தில் என்னோட இன்னொரு ஆதங்கத்தையும் எழுத வேண்டும்...

எனக்கென்னமோ அந்த கால கனரா, இந்தியன் பேங்க் வேலை செய்பவர்கள் போல வாழ்க்கை கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது. எந்த ஊரிலயும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.. வேலை போய்விடுமோ என்ற கவலையே இல்லை. எங்க போனாலும் செண்ட்ரல் போர்ட் ஸ்கூலில் குழந்தைகளுக்கு படிப்பு... கம்பெனியே தரும் வீடு.. ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களும் பிறகு கேட்கும் இடத்தில் டிராண்ஸ்பர், புது மனிதர்களுடன் பழக்கம்... சொர்கமாகத்தான் தோன்றுகிறது அந்த வாழ்க்கை.

இந்த கணிணித் துறையிலோ எப்பவும் அடுத்த சப்ஜெக்ட் தெரிஞ்சு வச்சிக்கணும்கற வேகத்தோடயே வாழ்க்கை.. நிச்சயமற்ற வேலை நிலை.. இதெல்லாம்.. என்னத்தான் பணம் கிடைச்சாலும் எதையோ மிஸ் பண்ற மாதிரி தோண வைப்பது நிஜம்.
posted by சாகரன் @ 7/18/2004 06:24:00 PM  
2 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER