சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, July 17, 2004
எண்ணித்துணிக கருமம்....
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

வள்ளுவரின் வேதமொழி வாக்கு. என்றும் எப்போதும் நினைவில் இருக்கவேண்டிய ஒன்று...

எந்த ஒரு முயற்சியையும் ஆரம்பித்த பிறகு காத்திருப்பதும், பின்னர் யோசிக்கலாம் ஆரம்பிப்போம் என்று சொல்வதும், காரியம் ஆரம்பித்த பிறகு சுணக்கத்தை தந்துவிடக் கூடும். அதன் காரணமாக ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடும் வாய்ப்பிருக்கிறது.

செயல் என்பது எப்பொழுதுமே, தனி ஒருவரின் சிந்தனையாகவும், பலரின் தூண்டுகோலாகவும் இருந்துதான் செயலாக மாறுகிறது. நேரடியாக செயலில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியாக முடிந்தாலும் பெரும்பாலான நேரங்க்ளில் பாதியில் நிறுத்தப்படும் வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் ஆலோசனை கேட்பதும், நட்புகளின் விருப்பம் கேட்கப்படுவதும் நடக்கிறது. கூட்டாக ஆரம்பிக்கப்படுவதும் நடக்கிறது.

பின்னர் ஏற்படலாம், என்று தோன்றும் பிரச்சனைகளுக்கும், தடங்கலுக்கும் பயந்து செயல்களில் இன்று ஈடுபடாமல் இருப்பவர்கள் நாளை வருத்தப்பட நேரிடும்.... செயலில் ஈடுபடாதவர்களிடம் சோம்பேறித்தனம் தான் தூக்கலாக இருக்கும். அது அவர்களுக்கு ஒரு வித கழிவிரக்கத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தலாம்...! ஏன் இந்த குழப்பம்.. சிறு தடங்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் கவலைப்படாமல்,
எண்ணித்துணிந்த காரியத்தை துரிதப்படுத்துவதும், கருமத்தில் நம்மையே தொலைப்பதும் தான் வாழ்க்கையின் வெற்றி என்று தோன்றுகிறது.

பகவத் கீதையில் கரும யோகத்திலும் கூட இதே கருத்து சொல்லப்பட்டிருக்கும்என்று நினைக்கிறேன்.
posted by சாகரன் @ 7/17/2004 11:22:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER