சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, July 10, 2004
குழப்பமும் தெளிவும்..
வாழ்க்கையில் குழப்பம் எதனால் நேரிடுகிறது?

இது ஒரு முக்கியமான கேள்வி. ஆனால் இந்த கேள்வியை கேட்கக் கூடத் தோன்றுவதில்லை பல நேரம்.ஏனென்றால் குழ்ப்பத்தில் நம்மை நாமே ஆழ்த்திக்கொண்டு விடுவதால்.

ஒரு மனிதன் எல்லா நேரமும் தெளிவாக இருக்க முடியுமா? அப்படி இருப்பத்ற்கு அவன் என்ன செய்ய வேண்டும்?! இதற்கு பதில் பல வரலாம்... ஆனால் உண்மையான பதிலை தெளிவாக இருப்பவர்கள் தான் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நம்மில் பலர், நம் இன்றைய நிலமையை தெளிவென்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

Live is relationship என்பார்கள். எப்போது ரிலேசன்ஷிப் தான் வாழ்க்கை என்று வந்துவிடுகிறதோ.. அப்போழுது குழப்பமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கவனமாக உறவுகளை கையாளுவது என்பது எப்போதும் முடியும் விசயமல்ல....உறவு என்று நான் சொல்வது எல்லாவற்றையும் இணைந்தது. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமல்ல.. நட்பும் கூடத்தான்..!

... குழப்பமும் தெளிவும் கலந்தது தான் வாழ்க்கை. அதில் முழுகி எழுவதுதான் மனிதனின் கட்டாயம்..!?!

posted by சாகரன் @ 7/10/2004 04:03:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER