சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, July 05, 2004
சவுதி மயமாக்கல் - நம் மக்கள்
இப்போது என்று அல்ல, சில வருடங்களாகவே சவுதி அரேபியாவில் முக்கியாக பேசப்படும் விசயம் சவுதிமயமாக்கல்(saudiazation).

காரணம்.. சவுதி நாட்டினரின் வேலையில்லாத் திண்டாட்டம். ஆனால் இதில் பிரச்சனை என்ன வென்றால், சவுதி நாட்டினர் சுய கவுரவம் அதிகம் பார்ப்பவராகவும், திறமை குறைவாக உள்ளவர்களாகவும் இருப்பது தான்.

இந்த நிலையும் இன்று மாறி வருகிறது. இப்போது வரும் புதிய தலைமுறையினர், முன்னிலும் வேகமாக வளர்ந்து வருகின்றனர். திறமைதான் சோறு போடும் என்பதைப்புரிந்து நடந்து கொள்கின்றனர்.

இதில், நம்மவர்கள் பாடுதான் திண்டாட்டம்.... பலருக்கு வருடா வருடம் வேலை இழப்பு ஏற்படுகிறது... அல்லது குறைந்த பட்சம், வேலை போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை சமாளிக்க, சில கம்பெனிகள் வெளிநாட்டவரை கன்ஸல்டெண்டுகளாக மாற்றிவிட்டனர். அப்படி என்றால் இது கணக்கில் வராது இல்லையா?!

இந்த விசயம் பற்றி பேச, எவ்வளவோ இருக்கிறது.. விரைவில்...
posted by சாகரன் @ 7/05/2004 02:25:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER