சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, November 13, 2004
பக்ரைனிலிருந்து
இந்தப் பதிவினை இப்பொழுது பக்ரைனிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இரண்டு தினங்கள் தமாம்... அல்கோபர் பக்கங்களில் சுற்றிவிட்டு, பாதிநிலவு பீச், கார்னிஷ், டால்பின் ஷோ இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, பக்ரைன் காஸ்வே மூலமாக கிராஸ் செய்து, கொஞ்ச தூரம் டிரைவிங்கில் நண்பர் சரவணனின் உதவியுடன், இடம் பிடித்து, பெட்டி படுக்கைகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பக்ரைன் எனக்கு எதுவும் பெரும் வித்தியாசமாக இல்லை. பெண்கள் உடைகளில் பர்த்தா இல்லை. எல்லா இடங்களிலும் மலையாளிகள் பார்க்க முடிகிறது. ஆங்கிலம் பேசுகிறார்கள். இது இரண்டு மணி நேர கணிப்பு மட்டுமே.

சன் டிவி வருகிறது. சங்கராச்சாரியார் பிரச்சனை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
நடுவில் யாசர் அராபத் மரணித்துவிட்டார் என்று சரவணன் சொன்னார். எகிப்து நாட்டில் அவருடைய அடக்கம் கூட முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று 13ம் திகதி. ஈத் முபாரக் எஸ்.எம்.எஸ் சில நண்பர்களுக்கு காலையில் அனுப்பியதுடன் ஆரம்பித்த நாள்... happy Eid!
posted by சாகரன் @ 11/13/2004 07:02:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER