சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Thursday, September 23, 2004
டபுள் ட்ரீட்!
கலைக்குழுக்கள் இல்லாத வெளிநாடு வாழ் தமிழினமா?

ரியாதில் உள்ள கலைக்குழுக்கள் பற்றிய என் கண்ணோட்டத்தையும் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது.

கவனிக்க. வழக்கம் போல இங்கும் குழு அல்ல குழுக்கள் உண்டு! இதன் காரணம் பல இருந்தாலும், அடிப்படை உணர்வுப் புரிதல்களாலான பிரச்சனைகளாக இருக்குமோ என்று தோன்றினாலும், வேறு விதக் கண்ணோட்டத்தில் இதைப் பார்ப்பது நல்லது. அது, தமிழ் கலாச்சார வளர்ச்சியில் அல்லது குழந்தைகளின் திறமைகளை அல்லது சுற்றி இருக்கும் தமிழ் சார்ந்த திறமையாளர்களை ஊக்குவிப்பது என்ற கண்ணோட்டம்.

இன்னொரு விடயம், இங்கு இந்திய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒரே இடம் இந்தியத் தூரதரக கலையரங்கம் மட்டும்தான். அதன் கொள்ளளவும் கம்மி. அதை விட்டால், அடுத்தபடியாக ஏதேனும் வில்லா-வைத் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். (ஆந்திர நண்பர்கள் அப்படித்தான் செய்வது வழக்கம்). ஆனால் அதில் ஒன்றும் சுகமில்லை. ஒரு கெட்-டு-கெதர் போலப்போய்விடும். ரியாத் முழுக்க பரவியிருக்கும் தமிழர்கள் ஏராளம். ஒரு குழுவில் இல்லாமல் பல குழுக்கள் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சிகளில் ஆட்களின் இடப்பற்றாக்குறையைச் சமன் செய்ய முடியும்.

கண்டிப்பாக எதிர்பார்க்கும் அளவிற்கு புரொபஷனிலிசமெல்லாம் எதுவும் இருக்காது. என்றாவது ஒரு நாள் ஒரு ஜாலிக்காகச் சென்று பார்க்கலாம் என்ற அளவில்தான் இருக்கும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஒவ்வொரு குழுவும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும். பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமா சம்பந்தப்பட்டவை தான்.

நிறைய நடப்பது எது என்று கேட்டால், ஆர்கெஸ்ட்ரா ... அடுத்த படி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள். அதிலும் +10,+12 படிக்கும்
வயதிலிருக்கும் சில குழந்தைகளின் குரலைக் கேட்க வேண்டுமே... ஆஹா.. அப்படி ஒரு ஈடுபாட்டுடன் பாடுவார்கள். ஆடுவார்கள். இந்திய தூதரகத்தில் நடப்பதால், பர்தா போட வேண்டிய அவசியமில்லை.
(பேச்சுலர்ஸ் பாயிண்ட் ஆப் வியூல.. இந்தப் புரோக்ராம் வந்தாத் தான் இந்திய பிகர் பார்க்க முடியும் சொல்வாங்க :-))

ஆர்வக் கோளாறுகளையும் தவிர்க்க முடியாது. ஒரு நிகழ்ச்சியில், ஒரு மேடம் (குறைந்தது வயது 45+ க்கு மேல் இருக்கும்) , "சகலகலா வல்லவனே..." என்று இழுத்து இழுத்து பாட ஆரம்பித்த நேரம், இனியும் தாங்க முடியாது என்று விழுந்தடித்து ஓடி வந்தது நினைவிற்கு வருகிறது. அதே நேரத்தில் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வயதில் இப்படி ஒரு ஆர்வமா என்று...

எனக்குத் தெரிந்து, ரியாத்-ல் மூன்று குழுக்கள் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு குழு இட்ஃபா என்னும், "இந்திய தமிழ் கலைக்குழு" ( Indian Tamil Fine Arts Association, Riyadh). கொஞ்சமாவது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு.
ஒரு முறை நாடகம், ஒரு முறை பரதநாட்டியம் (ஒவ்வொரு பாட்டிற்கும் விளக்கமான முன்னுரை) என்று ஏதாவது வித்தியாசமாகச் செய்ய முயற்சி செய்வார்கள்.

சில வருடங்களுக்கு முன் கவிக்கோ. அப்துல் ரகுமான், ஹஜ் பயணம் வந்திருந்த போது, அவர் முன்னிலையில் ஒரு கவியரங்கமும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. வழக்கம் போல, சவுதி வாழ் தனியாளின் துயரங்கள் தாங்கிய கவிதை அப்படி ஒரு வரவேற்பை பெற்றது என்பதைச்
சொல்லவும் வேண்டுமா? :-)

*****

இன்றைய தினம், மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த இந்தக் குழுவின் "கிளாசிகல் இசை இரவு" கிளாசிக்காகவே இருந்தது.
இது இட்பா-வின் ஐந்தாவது கர்னாடக சங்கீத நிகழ்ச்சி... !!

ரியாத் போன்ற நகரத்தில், அதுவும் கர்னாடிக் மியூசிக் நிகழ்ச்சி வைப்பதென்பது நிரம்பவே தைரியம் தேவைப்படும் விசயம். தைரியம் என்பது நிகழ்ச்சியை நடத்துவதற்கல்ல... எத்தனை பேர் ரசிப்பார்கள் என்பதுதான் கேள்வியே! எப்பொழுதுமே இட்பா நிகழ்ச்சியென்றால் நிரம்பி வழியும் மண்டபம்... இன்று கொஞ்சம் காற்றோட்டமாகவே தான் இருந்தது. ஆனால்... ரசிகர்கள் ரசித்தது நிறைய. கர்னாடக சங்கீத நிகழ்ச்சி என்பதால் கொஞ்சமாவது ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்!

இந்திய தூதரக முதல் செக்ரட்டரி திரு.நாராயணன் பற்றி கொஞ்ச நேரம் குழுவின் தலைவர் திரு ஜெயசீலன் அவர்கள் பேசினார்கள்.
அதில் சில முக்கியமான விபரங்களைச் சொன்னார்... இந்தியத்தூதரகத்தின் வேலைகள் ஏராளம். பாஸ்போர்ட் அப்ளைசெய்தால், அன்று மதியமே அல்ல்து அடுத்த நாளில் கொடுத்துவிடும் ஒரே நாடு ரியாத் இந்தியத் தூதரகம் மட்டுமே! (எவ்வளவு தூரம் உண்மை?!)

ஒரு நாளைக்கு சவுதியில் ஈஸ்டர்ன், செண்ட்ரல் ரீஜியன்களில் மட்டும் வெவ்வேறு காரணங்களுக்காக இறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நான்கு. அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்பும் முழு
பொறுப்பையும், இந்தியத் தூதரகம் செய்து வருகிறது. இரவு எந்த நேரமானாலும் காண்டாக்ட் செய்யக்கூடிய ஒரு நபர் நாராயணன்... எக்ஸட்ரா... எக்ஸட்ரா.... திரு. நாராயணன் தமிழிலும் பேசினார். பேச்சைப்பார்த்தால் கன்னடக்காரர் போலத் தெரிந்தது.
(ம்... நான் சிறப்பு விருந்தினரா.. பத்ரி சொன்ன நபர் வருவாரோன்னு எதிர் பார்த்தேன்.. ம்ஹும்... அடுத்த புரோக்ராம்ல பார்க்கலாம்..)

எப்பொழுதேனும் மட்டுமே கேட்க முடிகின்ற, வர்ணங்களும், "ரார வேணு கோபா பாலா.." போன்ற பாடல்களும் குழந்தைகளால்
பாடப்பட்டன. குட்டிக் குட்டி மழலைகள் அதுவும் மிஞ்சிப்போனால் மூன்று வயதுடையவர்கள் கூட மேடையேறி உற்சாகமாகப் பாடல்கள் பாடினார்கள்.


திரு எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்... பாடிய பாடலகள் 'ஒன்ஸ் மோர்' கேட்க வைத்தன. குரலில் அப்படி ஒரு கம்பீரம், அனாயாசமாக உச்சத்ஸ்தாயியில் பாடினார். திரு.வாசு அவர்கள் பாடிய ராஜாஜியின் 'குறையொன்றுமில்லை..' பாடலும்... மிகவும் ரசிக்க வைத்தது... (இந்தப்பாடலைக் கேட்டாலே, எம்.எஸ் செட் செய்த ட்ரெண்டோ என்று நினைக்கத்தோன்றுகிறது. எல்லோரும் ஒரே மாதிரித்தான் பாடுகிறார்கள். ஏற்றம் இறக்கம் அத்தனையும். அதே நேரத்தில் மாற்றிப்பாடினால் பிடிக்குமா என்ற சந்தேகமும் வருகிறது!)


ரியாதைப் பொருத்த வரை, வெளி இடங்களிலிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ அழைத்து வந்து ஒரு பிரோக்ராம் செய்வதென்பது கடினமான விசயம்.

அப்படிப் பார்க்கும் போது, கலாசாரம் மறக்க விரும்பாத தமிழர்களின் இது போன்ற புரோக்ராம்கள்... சந்தோஷமான ஒன்றுதான். எங்கிருந்துதான் பிடித்தார்களோ இத்தனைக் கலைஞர்களை. பெரும்பாலானவர்களுக்கு கர்னாடக சங்கீதம், வெறும் கேள்வி ஞானம் மட்டுமே என்று சொல்லித்தான் பாடினார்கள். (எனக்கும் கூடத்தான் :-( ) நிகழ்ச்சியின் ஒரே ஒரு குறை என்றால், கீபோர்ட் தான்.... கொர கொரவென்ற சத்தம். அது இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிண்ணணி, "வேணுகானமணி" புல்லாங்குழல் திரு. வேணுகோபால் அவர்களுடையது. இந்தியாவை விட்டு 14 வருடங்களுக்கு மேல் வெளிநாடுகளில் இருந்தாலும், ஆல் இந்திய ரேடியோவில் A கிரேடில் இருப்பவர். டிஸம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் பாடுபவர். வளரும் கலைஞராக ரெகக்னைஸ் செய்யப்படுபவர். "வேணுகானம்" என்ற சி.டி யை ரிலீஸ் செய்திருக்கிறார். ( இங்குள்ள குழந்தைகளை ட்ரெயின் செய்வது அவர்தான் போலும். விசாரிக்க வேண்டும். )

இன்று, 'டபுள் ட்ரீட்' தந்தார்.... அவரே வாய்ப்பாட்டும் பாடி, கூடவே புல்லாங்குழல் இசையும்! அதுவும் ஒரே நேரத்தில். திறமையை எங்கிருந்தாலும் தடை போட முடியாது!! வரும் டிசம்பர் 2004-ல் அவருடைய அடுத்த "டபிள் ட்ரீட்" சி.டி வெளியிடப்பட இருக்கிறது.

இன்றைய சங்கீத ட்ரீட் சுவையாகத் தான் இருந்தது. இடைவேளையில் கிடைத்த பொங்கல் வடையுடனும் சேர்த்து!
posted by சாகரன் @ 9/23/2004 11:59:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER