சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, August 18, 2004
கனவு
காலை எழும்போது சில நேரங்களில் வித்தியாசமான கனவுகளில் நீங்கள் மாட்டியிருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

இன்று ஒரு குழப்பமான கனவு...

நான் காரை பார்க் செய்யப்போகிறேன். இங்கு வேண்டாம் வேறு இடத்தில்தான் நிறுத்துவேன் என்று மெதுவாகச் செல்கிறேன்.ஒரு பார்க் ஒன்று வருகிறது. அதன் வாசலில் இடம் இருக்கிறது. பார்க்கில் ஒரே கூச்சல் குழப்பம். யாரோ ஒருவரை இருவர் போட்டு அடித்து துவைக்கிறார்கள். அவன் தப்பிக்க முயற்சிக்கிறான். ஆனால் விடாமல் துரத்தி அடிக்கிறார்க்ள்.

அவர்களை நெருங்குகிறேன். என்ன பிரச்சனை என்று கேட்கிறேன். ஒரு அழகான வாலிபன், பெண்களுக்கான உடை அணிந்து பெண்களுடன்இருந்திருக்கிறான். அதனால்தான் அவனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் வந்தவுடன், அவர்கள் அவனை விட்டு விடுகிறார்கள்.அவனிடம் என்ன என்று கேட்கிறேன். அவன் ஒரு மாதிரி அடி வாங்கியது உரைக்காமல், என் இஷ்டத்திற்கு இருக்க முடியாதா என்று அங்கலாய்க்கிறான்.

அடுத்த காட்சியில் அவன் மீண்டும் பெண் உடையுடன் வருகிறான்., புருவம் மழிப்பக்க்ப்ட்டு நேர்படுத்தப்பட்டுள்ளது. உதடு லிப்ஸ்டிக்கில் மினுக்கிறது.

என் கூட வா, என்று எங்கோ கூட்டிப்போகிறான். அவனுடன் ஒரு இளைஞனும் கூட வருகிறான்.

திடீரென்று இருவரும் ஒரு மரத்தின் பின்னால் இருட்டில் நுழைகிறார்கள். அங்கு ஒரு புதிய உலகமே இருக்கிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கில் தானே இருந்தோம். அது எப்படி இந்த உலகத்திற்கு?

அப்பொழுது சொல்கிறான். இந்த மனிதர்களை எல்லோராலும் பார்க்க முடியாது. இது ஒரு தனி உலகம். சில நேரம் மனிதர்கள் அறியும் விதத்தில்நடமாடுவோம், சில நேரம் யாருக்கும் நாங்கள் இருப்பது தெரியாது.

அடுத்த கட்டத்தில் ஏதோ ஒரு அருவி, அங்கே அருவியின் மலை மீதிலிருந்து இந்த இரண்டு இளைஞர்களும் விழுவது போல ஒரு கனவுக்குள் கனவு பிளாஷ்பேக்காக் ஓடுகிறது.அது என்ன அருவி? நான் பார்த்த ஒரே அருவி, குற்றாலம்தான், அதுவாக இருக்க முடியுமோ?

மீண்டும் இப்போ பார்க்கில் இருக்கிறோம். வேகமாக சைக்கிளில் ஒருவ்ன் வந்து நிறுத்துகிறான். எங்கே அந்த அடி வாங்கிய பையன் என்று என்னிடம் கேட்கிறான். நான் பதில் சொல்வதற்கு முன், நான் இங்குதான் இருக்கிறேன். ஆனால் சொல்லாதே என்று அந்த அடிவாங்கிய பையன் சொல்கிறான்.

எனக்கு இப்பொழுது குழப்பமாக இருக்கிறது... என்ன சொல்வது? இதோ இங்குதான் இருக்கிறான் உன் கண்ணிற்கு தெரியமாட்டான் என்றா?

நேரம் ஆயிடுச்சு... எந்திரி - இது என் மனைவி...

தூக்கம் கலைந்து விட்டாலும், இன்னமும் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற திகைப்பிலேயே இருந்தேன்...!

நேற்று பார்த்த Haunted Mansion அப்புறம், Ghost இந்த படங்களின் பாதிப்பு காரணமோ?
posted by சாகரன் @ 8/18/2004 10:38:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER