சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, August 14, 2004
விடுதலை
நாமிருக்கும் நாடுநமதென்பதறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று!

- பாரதியாரின் சுதந்திரப் பள்ளு.
--------------------------வந்தே மாதரம்-------------------------------

நம் முன்னோர்கள் ஒட்டு மொத்தமாக எந்த நாளில் மிக அதிகமாக சந்தோஷப்பட்டிருப்பார்கள் சமீப காலங்களில் என்றால், அது ஒரே ஒரு நாளாகத் தான் இருந்திருக்க முடியும். 55 வருடங்களுக்கு முந்திய அந்த தினம். சுதந்திர தினம்.

ஒரே கருத்தோடு இந்தியா முழுமையும் பெரும்பாலானவர் மகிழ்ந்த அந்த நாளில், அந்த சந்தோஷத்தை கொடுத்த தியாகிகளுக்கு நன்றி சொல்வதோடு மட்டும் நம் சிந்தனை முடிந்துவிடக்கூடாது.

நெஞ்சம் முழுவதும் சந்தோஷத்தை அள்ளித்தரும் இந்தியத் தாயின் முகம் நம் கண்ணில் தெரியாமல் போகலாம். ஆனால் அக மனதில் இந்தியா என்றால் ஒரு கம்பீரம் வருவதை அறிந்திருக்க முடியும். இந்தியா என்ற அந்த உணர்விற்கு ஒரு விநாடியேனும் நன்றி கூற வேண்டும். உனக்கு வேறு என்னென்ன செய்ய வேண்டும் நாங்கள் என்று இறைஞ்சுதல் வேண்டும்.

நண்பர்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
posted by சாகரன் @ 8/14/2004 04:25:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER