சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, August 09, 2004
ஷாக்...
நேற்று பார்த்த ஷாக் நிச்சயம் ஷாக்காக இல்லை. ஆனால் நிம்மதியாக இருந்தது.
ஷாக் திகில் என்று பெரிதாக ஒன்றும் இல்லாமல், மாயாஜால காட்சிகள்
அமைப்பும் இல்லாமல், ஆவி உலகம் பற்றியதாக அமைந்தது இன்னமும் நிம்மதி.

எப்பொழுதுமே ஒரு படம் பார்க்கும் போது அதில் வெளிப்படும் வித்தியாசமான அழுத்தமான பாத்திரப்படைப்புகளின்
குணாதிசியங்கள்தான் என் கண்ணில் படும். அதே போல இந்த படமும்.

மீனா கலக்கியிருக்கிறார். அவருடைய உடைகளும், நடிப்பும் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறது.

சில விசயங்கள் எனக்கு பிடித்திருந்தன. பிரசாந்த் படித்தவர் பேய், பிசாசு என்பதில் நம்பிக்கையில்ல்லாதவர்.
ஆனால் அவரே என் மனைவிக்கு ப்ப்ப்ப்பேஏஏய் பிடிச்சிருக்கு என்று வேண்டா வெறுப்பாக சொல்ல வேண்டிய அவசியம் வருவதை
அந்த சொல் பிரயோகத்திலேயே காட்டியிருக்கிறார்.

வழமை போல திகில் படம் என்ப்பதால் எல்லோரும் வித்தியாசமான குரல் தொனியுடந்தான் பேச வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள் போலும்.

பேக்ரவுண்ட் மியூசிக் படத்தின் ஒரு தூக்கல்தான். திகிலை படத்தில் இல்லாவிட்டாலும் பேக்ரவுண்ட் வரவைக்க டிரை பண்ணுகிறது.
அதிலும் சிலரது அடிக்குரல் கமறல்கள் பேக்ரவுண்டாக வரும்போது நிச்சயம் தூக்கலாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட முடிவு! நிச்சயம் நல்ல படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறது.

தமிழில் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!!
posted by சாகரன் @ 8/09/2004 04:22:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER