சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, August 15, 2004
சவுதி, ரியாத்: சுதந்திரதின கொடியேற்றம்
சவுதி,ரியாத், ஆக.,15 -

இன்று சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் காலை சவுதி அரேபிய நேரப்படி காலை 8 மணி அளவில், இந்திய தூதுவரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டு தேசிய கீதம் பாடி கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஜனாதிபதியின் உரை படிக்கப்ப்ட்டது. உரையின் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அடுத்ததாக அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

இன்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தென் நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(டிஜிடல் கேமரா எடுத்துட்டு போகல:-( )
posted by சாகரன் @ 8/15/2004 10:17:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER