சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, August 14, 2004
பொறாமையா, போட்டியா?
அடிக்கடி டி.வி பார்க்கிறீர்கள்தானே!

இப்பொழுது வரும் பேட்டிகளில் (ஆமாம் சினிமா பேட்டிகள்தான்!) எத்தனை பேர் இளைய தலைமுறை பாருங்கள்.

சினிமா பாடகிகளிலிருந்து, நடிகர்,நடிகையர், இன்னும் எத்தனையெத்தனையோ பிரோகிராம்களில் பங்கு கொள்ளும்(அரட்டை அரங்கம், பட்டிமன்றம் போன்ற) அத்தனை பேரும் இளைஞர்களே!

இதெல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு தோன்றுவது என்ன?

நாம என்ன செய்யரோம் எவ்வளவு திறமையை நம்மால வளர்த்துக்க முடியும்ங்கற எண்ணம் உங்களுக்கு தோன்றவில்லையா?

இது பொறாமை அல்ல. ஜெயிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது, குறைந்த பட்சம் நம் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்லப்பிரியப்படுகிறேன்.

வாழ்க்கையில் சும்மா, வெட்டியா டி.வி பார்க்கறது, ஏதேனும் ஜாலியா நேரத்தை போக்கறதுன்னு இல்லாம எத்தனையோ செய்யலாம் எப்படி நேரத்தை உருப்படியாக்கலாம் அப்படின்னு யோசிக்கறதுதான் சரியானது. அப்படி இல்லாமல் போனால் நாளைய உலகில் வெறும் புலம்பல் ஆசாமியாகத் தான் இருக்க வேண்டும். அதைவிட கேவலம் உண்டா? எது நம்முடைய துறை என்பதை முடிவு செய்து அதில் திறமையை முழுமையாக்குவதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.

செய் அல்லது செத்து மடி!

(நண்பர்களே, யாருக்காகவும் நான் இதை எழுதவில்லை. எனக்காகவே தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். - சாகரன்)

posted by சாகரன் @ 8/14/2004 12:03:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER