சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, August 16, 2004
ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் துவக்கம்.
நேற்று ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவை ரெகார்ட் செய்து வைத்த கேசட்டிலிருந்து பார்த்தோம்.

அட்டகாசமான கனவுக்காட்சியாக இருந்தது. ஏகப்பட்ட செலவு செய்திருப்பார்கள்!.

ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் மைதானம் முழுவதும் தண்ணீரும் பின்னர் சட்டென்று அந்த நீர் காணாமல் போவதும், அலை அலையாய் வருவது போல ஒரு நீல(ள) துணி மைதானம் முழுவதும் பரவுவதும், பார்க்க கலக்கலாக இருந்தது. மேடையைச் சுற்றி அணிவகுப்பாக உலக கலாசார மாறுதல்கள் பொம்மை வேடமிட்ட மனிதர்களால் நிகழ்த்தி காட்டப்பட்டது இன்னமும் அருமை.

வழக்கம்போல எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்தியா வரும் போது பார்த்தால் கூட்டம் கம்பியாக இருந்தது.

என்ன இது, வெரும் பத்து பேர் மட்டுமே அஞ்சுவின் பின்னால் வருகிறார்களே என்று யோசித்த போது, சரி நமக்கு ஏதாவது கப் கிடைக்கும் என்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காலி.

சாதாரண சிறு சிறு நாடுகளெல்லாம் ஏராளமான பேர் போட்டிக்கு செல்லும் போது இந்தியாவில் ஆட்கள் இல்லையா என்ன? எது இங்கு பிரச்சனை? அரசியலா பணமா? செலவு மிச்சம் பிடிக்கறாங்களா? வேதனையாக இருந்தது.

ஒருவேளை ஹாக்கி குழு போன்றவர்கள் நிறைய பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லையோ? தெரியவில்லை.

விளையாட்டுத்துறைக்கு நிறைய பணம் செலவு செய்வதும், ஊக்கப்படுத்தப்படவேண்டியதும் மிகவும் அவசியம். விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.

2016ல் இந்திய ஒலிம்பிக் இந்த அளவு செலவு செய்வார்களா? அடுத்தவர்கு நாம் இளைத்தவரில்லை என்று நிரூபிப்பார்களா? ஏனோ கவலை தொத்திக்கொண்டது.
posted by சாகரன் @ 8/16/2004 12:57:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER