சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, August 18, 2004
ரசம்
"ஹாய்டா... எனக்கு ஒரு ஆபர் வந்திருக்கு, சவுதி அரேபியாவில. இந்த கம்பெனி எப்படி பார்த்து சொல்றியா? "

"அப்படியா? சொல்லு எந்த கம்பெனின்னு... "

"*** டிராவல்ஸ். "

"ம்.. கேள்விப்பட்டதில்ல்... சரி, சாலரி என்ன சொல்றாங்க.. "

"3000 ரியால்ஸ்.. சொல்லிருக்காங்க, மத்தபடி இரண்டு வ்ருசத்து ஒரு தடவை விடுமுறை.. இடம் பிரீ. சாப்பாடு நாமதான். "

எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. மூவாயிரம் என்பது ஒன்றும் குறைந்த பணம் அல்ல. கண்டிப்பாக நல்ல பணம்தான்.
ஆனால் அதே சம்யத்தில், சவுதியில் கணிணி துறைக்கு இன்னமும் நல்ல சம்பளம் கிடைக்கும்.
ஒரு 5000+ ஆவது இருந்தால்தான் நல்லது.

அதுவும் தவிர, சவுதி எல்லோருக்கும் ஒத்துக்காது. இது ஒரு போர் ஊரு. ஏண்டா வந்தோம்னு சமயத்தில நம்ம மேலயே எரிச்சல் வரும்.
பேச்சுலருக்கு கொஞ்ச நாள் தான், இல்லைனா பைத்தியம் ஆயிடலாம். சாப்பாடு பிரச்சனை இல்ல. ஆனா தனிமை பிரச்சனை.
தனிமை கடி. தனிமை எரிச்சல். சுத்தியும் நம்ம மக்கள்தான், ஆனா எல்லாரும் சரிசமமா பழகுவாங்க சொல்ல முடியாது. எல்லா பிரச்சனையும் உண்டு.

"சவுதி வேணாண்டா ஜோ, ஏதோ பேர் தெரியாத கம்பெனி சொல்ற, கஷ்டமா இருக்கப்போவுதுடா.. "

"அடப்போடா.. இதெல்லாம் விட கொடுமைலாம் நான் குஜராத்ல பார்த்துட்டேன்." (அவன் குஜராத்தில் வேலை செய்தான்)

ஏனோ தெரியல, இப்படி சொன்னால் சவுதிக்கு வரவேண்டாம் என்று சொன்னால் பாதி பேர் நம்புவதில்லை. நாம் ஏதோ வேணும்னே அவங்க முன்னேறறதை தவிர்க்கறதா நினைப்பாங்க... அதனால் அதிகம் அழுத்தி சொல்ல முடியறதில்லை.

"சரிடா நான் விசாரிச்சுட்டு சொல்றேன். "

ஒரு ட்ராவல் ஏஜென்ஸியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு போன் செய்தேன்.

"அந்த கம்பெனியா? படுத்துவாங்களே கல்யாண். காலைல எர்லி மார்னிங் வேலைக்கு போகணும். லீவு நாள்னு ஒண்ணும் கிடையாது. ரூம்லாம் நல்லா இருக்கும் சொல்ல முடியாது. உங்க கம்பெனி முடியாதா.. "

அவனுடைய டெவலப்பர் 2000 நாலெட்ஜுக்கு என் கம்பெனியில் வேலை கிடைக்காது.

ஜோசப்பிற்கு போன் செய்தேன். விபரம் சொன்னேன். கேட்டுக்கொண்டான். மறுபடி யோசிக்கச் சொன்னேன்.

"பார்க்கலாம்டா.. நான் வரத்தான் போறேன். "

---*--------*-----*----------

ஜோசப் ரியாத் வரும் நேரம் நான் வெகேஷனில் இருந்தேன் என் திருமணத்திற்காக. சில மாதங்கள் கழித்த பிறகும் அவனிடமிருந்து தொடர்பில்லை.
ஏனோ இன்று அவன் ஞாபகம் நிறைய வந்தது. முதலில் அனுப்பியிருந்த மெயிலை தேடி எடுத்தேன். அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டேன். 

" ஹலோ... "

"மர்ஹாபா(வெல்கம் இன் அரபி) "

"கேன் ஐ ஸ்பீக் டு ஐடி டிபாட்மெண்ட்? "

"ஒகே... "

...... ஏதோ அரயியில் அட்வர்டைஸ்மெண்ட் ஓடியது....

"ஹலோ... "
"கேன் ஐ ஸ்பீக் டு ஜோசப் ப்ரேம் குமார்.. "
"வெயிட்... "
"ஹலோ ஜோ, ஞாபகம் இருக்கா? நான் கல்யாண் பேசறேன். "
"ஹாய்டா... சொல்லுடா... "
"என்னடா எபப்டி இருக்கே... ஏன் உன் குரல் இப்படி மாறியிருக்கு உடம்பு சரியில்ல்லியா? "
"ம்... அதெல்லாம் ஒண்ணும் இல்லை... கொஞ்சம் லைட்டா பீவர் மாதிரி.. "
"ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்... "
"அது பரவாயில்லை. சொல்லு நீ எப்படி இருக்க? வீட்ல எப்படி இருக்காங்க.. "
"நல்லா இருக்காங்க மச்சி... "
"கல்யாண். நாம் அப்புறம் போன் பண்றேனே.. கொஞ்சம் வேலை இருக்கு "
"சரிடா... "

போன் வைத்த பிறகும் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. எப்படி பழகிய நண்பன். அருகில் இருக்கிறான். போய் பார்க்கக்கூட இல்லைனா எப்படி, மறுபடி போன் அடித்தேன். இப்போ எடுத்தவர் ஜோசப் என்றவுடன் தமிழ்லேயே பேசினார்.
"அவருக்கு உடம்பு சரியில்லைனு கம்பூட்டர் ரூமில ரெஸ்ட் எடுத்துகிட்டிருக்காரு. இருங்க கூப்பிடறேன். "
நான் வேண்டாம், அட்ரஸ் சொல்லுங்க எப்படி வரணும் என்றேன்.

அந்த் கம்பெனி பக்கத்தில் தான் இருந்தது. டாக்ஸியில் சென்று, கம்பெனியில் ஐடி டிபார்ட்மெண்ட் தேடினேன். ஜோசப்..
கொஞ்ச நேரங்கழித்து வந்தான். உருகி போயிருந்தான். ஷாக்காக இருந்தது. எப்படி இருந்தவன். குண்டா.. தாட்டியான ஆளாக பார்த்தவனா இப்படி, ஒல்லியாக இளைத்து ?

"என்ன ஆச்சு ஜோ இப்படி ஆயிட்ட... "
"சாப்பாடு ஒத்துக்கல கல்யாண்.. "
"உடம்புக்கு என்ன.. "
"ஓண்ணும் இல்லை ரெண்டு நாளா வைரல் பீவர். "
"டாக்டர்ட போனியா... "
"இல்லைடா... நானே மாத்திரை சாப்பிடரேன்... "
"ஏன் டாக்டர்ட போல.. "
"லீவு கிடைக்கலடா.. குடுக்க மாட்டாங்க.. மூணு நாள் லீவு எடுத்தா ஒரு நாள் சம்பளம் கட்.. மாசத்துக்கு ஒருநாள்தான் எடுக்கலாம்.நான் ஏற்கனவே ஒரு நாள் எடுத்துட்டேன். அதுவும் தவிர டாக்டர் பீஸ் 50 ரியாலாவது ஆகுமில்ல.. "
"ம்... "
"சரி கிளம்பு எங்க வீடூக்கு போகலாம். "
"இரு சொல்லிட்டு வந்துடறேன். "

வைரல் பீவர் பற்றி எனக்குத் தெரியும். உடம்பை முறுக்கி போடும் கொடுமையான ஒன்று. கண்டிப்பாக மூன்று நாளாவது இருந்துவிட்டுத்தான் போகும்.அதற்கு அடிபடாதவர் இங்கு குறைவு.
சவுதி மாதிரி ஊர்களில் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் இது போன்ற நேரங்கள்தான் கொடுமை. பக்கத்தில யாருமே இல்லை என்ற உண்மை அப்பொழுதுதான் அழுத்தமாகத் தோன்றும்.

வீட்டுக்கு போன் பேசினேன். என் மனைவியிடம்.. ஜோசப் வருவதை சொன்னேன். உடம்பு சரியில்லாததையும்.

வீட்டில் வந்தான், ரசம் சாப்பாடு சாப்பிட்டான். நன்றாக பேசினான்.
மாலை நேரம் கழித்து கிளம்பினான்... முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. நிம்மதியாக இருந்தது.

மறுநாள்,
அவனிடமிருந்து போன் வந்தது.

"இன்னிக்கு நல்லாயிடுச்சுடா.. இப்பத்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குடா. தெரிஞவங்கள வேற ஊரில பார்க்கறதில உள்ள இனபமே தனிதான். இன்னிக்கி எங்க வீட்டுக்கு போன் பண்ணி நான் உன்னை பார்த்ததை சொன்னேன். அவங்களும் சந்தோசப்பட்டாங்க.இப்ப உடம்பு நல்லாயிடுச்சுன்னா அதுக்கு உங்க வீட்ல ரசம் சாப்பிட்டது தாண்டா காரணம்...ரொம்ப தாங்க்ஸ்டா.. அவங்க கிட்டயும் சொல்லிடு.. "
...........

ஜோசப்... நீ வந்து போனபிறகு எங்க ரெண்டு பேருக்கும் வைரல் பீவர், ஆனா ரசம் வைத்துக்கொடுக்கத்தான் யாருமில்லை.
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

 


பின்குறிப்பு



ஜோசப் இப்பொழுது அந்த கம்பெனியில் இல்லை. ஒரு எமர்ஜென்ஸி விடுப்பில் இந்தியா சென்றவன், சவுதி திரும்பவில்லை!

posted by சாகரன் @ 8/18/2004 05:13:00 PM  
2 Comments:
  • At 6:03 PM, Blogger Gyanadevan said…

    அந்த காய்ச்சல் அவ்வளவு சீக்கிரமாகவா பரவும்???

     
  • At 6:09 PM, Blogger சாகரன் said…

    ஆமாம் ஞானதேவன், அது கொஞ்சம் வேகமாகப் பரவும் காய்ச்சல்தான்... வருடா வருடம் பெரும்பாலும் ஏமாற்றாமல் பரவக்கூடிய அதற்கு, தனி தடுப்பு மருந்து கூட உண்டு. தடுப்பு ஊசி போட்டுக்கறதுக்கு எக்ஸ்ட்ரா செலவு, வந்தா பார்த்துக்கலாம்னு விட்டுடறவங்க அதிகம்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER