சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, July 13, 2004
கவிதையும்.....
இது ஒரு காண்ட்ரொவர்ஷியல் டாபிக்...
எனக்கு கவிதை என்பது பல நேரங்களில் புரிபடவில்லை.
கவிதையை ரசிப்பதற்கு மனம் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதுவும் கவிதைக்கென்று ஒரு மனம் வேண்டும் போலும்...

ஓவியங்களில் மாடர்ன் ஆர்ட் என்று ஒன்று உண்டு... அதில் வரைந்திருப்பது என்ன என்பது புரிவதற்கு வரைந்தவர் வந்து விளக்கம் சொல்ல வேணும்..அல்லது நீங்களாக ஏதேனும் கற்பனை செய்ய வேண்டும்.
இது போலத்தான் கவிதையும் என்று தோன்றுகிறது... வார்த்தைகளை இட்டுகட்டி சொல்நயத்துடன் கொஞ்சம் சந்தமும் சேர்த்து எழுதுவதுதான் கவிதையா? தெரியவில்லை. இன்று வரும் பல 'புது'க்கவிதைகள் அப்படித்தான் இருக்கின்றன. சில கவிதைகள் மட்டும் சொல் தாண்டி ஏதோ ஒன்றை புரிய வைக்க முயலுவதாகத் தோன்றுகிறது. அதுதான் கவிதை என்றும் சொல்லத் தோன்றுகிறது.
சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லும் எந்த ஒரு ஊடகமும் சிறப்புதான்.. ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும் என்றால், சற்று சிந்திக்க வேண்டி இருக்கிறது.

எனக்கென்னமோ... ரொம்ப யோசிக்க வைக்காமல், அதே சமயம் கொஞ்சம் யோசிச்சாலும் புரிஞ்சுக்கறமாதிரி இருக்கற உள்ளார்ந்த அர்த்தம் உள்ள சிறு வார்த்தை பிரயோகங்கள் கொண்ட கவிதைகள் தான் பிடித்திருக்கிறது. வார்த்தைகளை அகராதியை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சரி அடுத்ததை படிக்கலாம் என்று மனம் தாவி விடுகிறது...

இது என் கஷ்டம் தான்; "லோகோ பின்ன ருசி..." ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு எண்ணம்.... யார் கண்டார்கள் என்றேனும் எனக்கும் கூட கவிதையின் அடிநாதம் பிடிபடலாம்.. அன்று என் கருத்துக்களும் மாறலாம்..!!
posted by சாகரன் @ 7/13/2004 10:35:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER