சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, September 11, 2004
உல்லாச(ம்) நாயகன்!
எப்பொழுதுமே இந்த தாதாக்களின் வாழ்க்கை, அது குறித்து அறிந்து கொள்வது என்பது ஒரு ஆர்வமான விசயமாகவே இருக்கிறது. மும்பை தாதாக்கள் பற்றிய பேச்சு வரும் போதும், அல்லது நம் ஊர் தாதாக்கள் பற்றிய செய்தி வரும் போதும், அவர் எப்படிப்பட்டவர் என்ற தெரிதலில் ஏற்படும் ஆர்வம் ஒன்றும் குறைவானதாக இருப்பதில்லை.

எங்கள் ஊரில், சில குழுமங்கள் உண்டு. ஏன், கல்லூரி நாட்களில் நான் இணைந்திருந்த குழுமத்திலும் அந்த தாதாக்கள் சார்பு உண்டு. எங்களூர் பக்கங்களில், சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் போது, யாராவது தெரிந்தவர் ஒருவர் சிபாரிசு செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கொடுக்க மாட்டார்கள். எங்கள் ஊரிலாகட்டும் அல்லது பக்கத்து ஊர்களான திருவாரூர் போன்ற இடங்களிலாகட்டும், அவர் பெயரைச் சொன்னால் உடனடியாக இந்த வாடகை சைக்கிள் கிடைத்துவிடும். இதற்கு மட்டுமல்ல, வேறு எங்கு சென்று அவர் பெயரைச் சொன்னாலும், அதற்கு கிடைக்கும் மரியாதையே தனி! அப்படிப்பட்ட மதிப்புடைய ஒருவரை தாதா என்று அந்த பீரியடில் சொன்னால் சண்டைக்கு வந்திருப்பார்கள். ஆனால் இன்று, அப்படித்தான் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. அவர் தந்தை, பின்னர் அவர், பின்னர் அவர் தம்பிகள், மகன்கள் என்று அவர்கள் ராஜ்ஜியம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.

தமிழ் சினிமாவிலும் சரி, தமிழ் புத்தகங்களிலும் சரி, இது குறித்த கதைகள் நிறையவே உண்டு. தமிழ் சினிமாவைப் பொருத்த வரை, தாதா என்ற விசயத்தை ஊறுகாயாக சில படங்கள் தொட்டுக்கொண்டாலும், பல படங்கள் சிறப்பான முறையில் வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். பந்தா பண்ணும் வில்லன் தாதா அல்ல.. தாதா என்றால் அவருக்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும். நல்லவராக ஆனால், தன்னிடம் அடைக்கலம் அடைபவர்களுக்கு (அடிதடி) உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும், பெரிய பிசினஸ் ஆளாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் வந்த ஸ்பைடர்மேன் படம், வெற்றி பெரும் என்பதற்கான காரணமாக முன்வைக்கப்பட்ட விசயம், இது சாதாரண தனி மனிதன், அசாதரணமானவனாக மாறும் கதை என்பது. இந்த ஆசை பலருக்கு இருக்கும் ஒன்று! சக்திமான் என்ற டி.வி சீரியல் கூட இப்பொழுது ஞாபகம் வருகிறது. சூப்பர்ஹிட் பாட்சா-வில் ஆரம்பித்து முந்தைய நாயகன் வரை பல படங்கள் வெற்றிப்படங்களாக இருப்பதற்கு இந்த ஒரு வித இயல்பான ஆர்வத் தூண்டுதல் கூட காரணமாக இருந்திருக்கலாம்.

வீட்ல யாரும் இல்லையா..., நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று வைத்திருந்த "தி காட்பாதர்" திரைப்படம் மூன்று பாகங்களும், நேற்று முந்தினம் பார்த்து முடித்துவிட்டேன். (சும்மா இல்லை, ஓவ்வொரு பாகமும் 3 மணி நேரம்..! ஆனாலும் சுவாரஸ்யம்தான்!)
படம் பற்றி,
சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், "நாயகன் + உல்லாசம்".
posted by சாகரன் @ 9/11/2004 10:56:00 AM  
3 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER