சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, August 06, 2004
கற்பனையும் நாமும்....
மனசில கற்பனைங்கறது இல்லாத நேரம் இருக்கா? எனக்கு சந்தேகம்னுதான் தோணுது.

இப்பன்னு இல்ல, ரொம்ப சின்ன வயசுலயே... இந்த டூ, காய் , பழம்லாம் விட்டுக்க ஆரம்பிச்ச அந்த வயசுலேர்ந்தே இந்த கற்பனைங்கற ஒரு விசயம் நம்ம கூட தொத்திக்கிடுது. இன்னும் சொல்லப்போனா, பிறந்த குழந்தையாக இருக்கும் போது குழந்தை தானாக சிரிப்பதைப்பார்த்து குழந்தையோட கனவுல யாரோ கடவுள் வந்து விளையாட்டு காண்பிப்பதாகக் கூட சொல்வாங்க. அப்ப.. கனவுங்கறது பிறக்கும் போதே ஆரம்பிச்சிடுதா?!

இது தவிர்க்கணும் அப்படின்னு பெரிய பெரிய ஆளுங்களும் ஞானிகளும் சொல்வாங்க. ஏன் அப்படிங்கறத விட இதினால நமக்கு என்னங்கறத கொஞ்சம் பார்க்கலாம்.

யோசிச்சு பாருங்க... நீங்க இந்த கனவுகள்,கற்பனைகள் இல்லாத ஆளு சொல்ல முடியுமா? நான் சொல்ற கனவுங்கரது ஒரு வித கற்பனை... அதாவது பகல் கனவுன்னு சொல்வாங்க.

கண்ணு எதையாவது பார்த்துகிட்டிருக்கும், மனசு எங்கியோ ஓடிகிட்டிருக்கும். இதை பத்தி இன்னும் சில இண்ட்ரஸ்டிங்கான நினைவுகளை பகிரிந்து கொள்ளலாமே....

சின்ன வயசில, எனக்கும் சில நண்பர்களுக்கு நடுவில் சண்டை வந்து பின்னர் பொது நண்பர்களால் இணைக்கப்ப்டும் போது (அதாவது பழம் விடும் போது) அந்த காலங்களில் ஏதோ ஒருவித சந்தோஷம் தனிமையில் அவற்றை நினைத்துப்பார்க்கும் போது,அது சம்பந்தமான கற்பனையில் இருந்த போது இருந்ததாக தூரத்தில் தோன்றுவதுண்டு.

பின்னர், ஸ்கூல், காலேஜ் என்று வரும்போது, ஏதோ அந்த பரிட்சையில் திடீரென்று நமக்கு மட்டும் யாரோ ஒரு ஜீனி வந்து ஹெல்ப் பண்ற மாதிரியும், தானாகவே கை பரிட்சை முழுசையும் எழுதிடற மாதிரியோ அல்லது ஃகொஸ்டின் பேப்பர் நமக்கு மட்டும் கிடைத்துவிடுகிற மாதிரியோ அல்லது எப்படியோ சூப்பரா படிச்சு சூப்பரா மார்க் எடுத்துட மாதிரியோ அடிக்கடி கற்பனை வரும்.... (கடைசில வர்ற மார்க் என்னவோ சுமார்தான் வைங்க..)

இதே கற்பனை காலேஜ் காலத்தில் வேறு விதமான சிறகு எடுத்ததும் கொஞ்சம் லைட்டா (அப்படித்தான் சொல்லணும்) ஞாபகம் வர்து. அது வேற ஒண்ணும் இல்லை... இனக்கவர்ச்சி சமாசாரம்தான். அந்த நேரங்கள்ல என்ன மாதிரி கற்பனை ஓடியிருக்கும்கறது உங்களுக்கே தெரியும்.... தினம் ஒரு மனம்.

அப்புறம், மேற்படிப்பு, வேலை இப்படி எத்தனையோ இருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்திலயும் நாம செய்வதற்கு சம்பந்தமாவோ இல்லை சம்பந்தமில்லாமலேயோ எத்தனையோ கற்பனைகள்.... எனக்கு அப்ப்டி இருந்தா, நடந்தாங்கற மாதிரி.

நம்ம ஜனாதிபதி கலாம், சொல்லியிருக்கும், "கனவு காணுங்கள்" என்ற விசயம் இப்பத் தெரியாத ஆட்கள் குறைவு.

இதில ஒரு குழப்பம் இருக்கு. கனவுங்கறது வேற, கற்பனைங்கறது வேற ஆனால் பல நேரங்கள்ல ரெண்டும் ஒண்ணு நினைச்சிப்போம். ஆனா, ரெண்டுக்கும் அப்படி ஒரு தொடர்பு. திருவிளையாடல் 'சேர்ந்தே இருப்பது...' மாதிரி.

உதாரணத்திற்கு, கனவுங்கறது எதையாவது செய்யணும், சாதிக்கணும்ங்கற எண்ணம். அந்த மாதிரி ஆகணும்னு நினைச்சுக்கறது. ஆனா, கற்பனைங்கறது அப்படி ஆனா நான் என்ன பண்ணுவேன், எப்படில்லாம் என்ஜாய் பண்ணுவேன் நினைச்சிக்கறது.

கனவுக்கு பின்னாடி கற்பனை வராம இருக்குமா? அப்ப அந்த கனவு காண்பதன் அர்த்தமே என்ன? இப்படில்லாம் சந்தோஷமா இருக்கும்னு நினைக்கறதினாலதானே இந்த கனவே...

இந்தக் கேள்விகள் எனக்கு எப்பவும் உண்டு... ,

கற்பனையே பண்ணக்கூடாது சொல்றது தப்பு மட்டும் இல்லை.. முடியவும் முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.ஆனால், அதிலயே முழ்கிட்டா பின்னர் எழுந்திருக்கிறது கடினம்கறதினாலதான் கற்பனைகள்ல கூட கொஞ்சம் டிஸ்டென்ஸ் வச்சிகங்க என்று எல்லாரும் சொல்லியிருக்காங்க தோணுது.

posted by சாகரன் @ 8/06/2004 11:15:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER