சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, August 24, 2004
பேஃமிலி வெகேஷன்...
கடைசியா ஊருக்கு சென்று வந்து சுமார் 5 மாசத்துக்கு மேல ஆகிவிட்டது.

சவுதி மாதிரி ஊர்ல இது ரொம்ப கடி. எந்த வித எண்டர்டெயிண்மெண்டும் கிடையாதுங்கறதுனால,
ஊருக்கு போவதே பெரிய எண்டர்டெயின்மெண்ட்...

நான் கூட பரவாயில்லை... ஏதோ ஆபீஸுக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். வீட்ல அவங்க என்ன பண்ணுவாங்க?

ரொம்ப போரடிச்சுடுச்சு போல. கொஞ்ச நாளா ஊருக்கு போகணும்னு ரொம்ப நச்சரிச்சாங்க... அட்லீஸ்ட் ஒரு மாசமாவது போய்ட்டி வரேன் சொல்லிக்கிட்டிருந்தாங்க...

சரின்னு எக்ஸிட்-ரீ எண்ட்ரி, டிக்கட் எல்லாம் இன்னிக்கி அரேஞ் பண்ணிட்டேன். நம்மாலதான் போகமுடியாது ஆபீஸ் வேலை..., வீட்லயாவது போய்ட்டு வரட்டுமே! இன்னும் இரண்டு வாரத்தில கிளம்பிடுவாங்க...

என்ன, அவங்களும் மகளும் ஊருக்கு போனதுக்கப்புறம்தான் எனக்கு ரொம்ப போரடிக்கப் போகுது..!! :-(

உருப்படியா ஏதாவது எக்ஸாமுக்கு படிக்க டிரை பண்ணலாம் நினைச்சுகிட்டிருக்கேன். பார்க்கலாம்.
posted by சாகரன் @ 8/24/2004 06:59:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER