சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, August 21, 2004
கைகளில் வைரஸ்
ஜலதோஷம் என்பது வராத மனிதர்கள் இருக்க முடியுமா? சான்ஸே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

இது ஒரு இயல்பாக மறக்கப்படும் பிரச்சனை;இதற்கு பெரிய தீர்வென்று ஒன்றுமே கிடையாது.

நான் பேசிக்கொண்டிருப்பது காமன் கோல்ட் எனச் சொல்லப்படும் சாதாரண ஜலதோஷம் பற்றி.

எப்படி இந்த ஜலதோஷம் பரவுகிறது? 

இந்த வகை வைரஸ் கிருமிகள் மூக்கினுள் பல்கி பெருகுகின்றன. மூக்கிலுள்ள செல்களை ஆக்கிரமிட்ப்பதன் மூலமாக.முதல் மூன்று நாட்களில்தான் அதிக அளவில் இந்த வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. படுத்துகின்றன.சில நேரங்களில் இருமல், தும்மல் கூட இந்த கிருமிகளை வெளிவிடுகிறது. இந்த வகை கிருமிகள் மூக்கினை தொடுவதாலும், மூக்கினை சிந்துவதாலும் கைகளில் பரவி, பின்னர் நம்மைச்சுற்றி உள்ள இடங்களிலும் தங்குகிறது. இதனால் உடனடியாக நாம் தொடுபவர்களுக்கும் பரவுவது சாத்தியமே... குழந்தைகளை கேட்கவே வேண்டாம்;வேகமாக அவர்களுக்குத்தான் பரவும்.

சோதனைகள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. இந்த கிருமிகளை கைகளால் தொட்டவர்கள் கண்களை தொடுவதாலும், நாசியினைத் தொடுவதாலும் இது அவர்களுக்கு பரவுகிறது.

ஆக மொத்தம் கைகளிலும் சுற்றுப்புறங்களிலும் வைரஸை எடுத்துக்கொண்டு சுற்றுபவர்கள் நம் ஜலதோஷத்தினால் தாக்கப்பட்ட நண்பர்கள்.கொஞ்ச்சூண்டு யோசிச்சு பாருங்க... ஒரு பிரவுசிங் செண்டர் போகறீங்க, கம்ப்யூட்டர் கீ போர்டை தட்டறீங்க... அதில் கூட இந்த கிருமி ஒளிந்திருக்கலாம்... இப்படி எத்தனை எத்தனையோ இருக்கலாம்கள் இருக்கும். ஆக மொத்தம் இதிலேர்ந்து தப்பிக்கறது கஷ்டம்தான்.

அதே நேரத்தில் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்ற கேள்வி வரும்போது, ரொம்ப சிம்பிளான ஒரு விசயம் சொல்றாங்க. அதுதான் கைகளை கழுவுதல்! ஆமா... எப்பல்லாம், நீங்க ஜலதோஷம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச நேர்கிறதோ பழக நேர்கிறதோ.. அப்பொழுதெல்லாம் உடனடியாக வந்து கைகளை கழுவுவதால் இந்த கிருமி உடனடியாக சென்று விடுகிறது. முக்கியமாக சின்னக் குழந்தைகளின் மூலமாகக் கூட இவை பரவலாம் என்பதாலும், கை கழுவாமல் கண்களையும் நாசியையும் தொடுவதாலும் இந்த பிரச்சனை வருகிறதாம். அதனால் அடிக்கடி கை கழுவுதல் அவசியம் என்று சொல்கிறார்கள்.

இதெல்லாம் ஏன் இன்று எழுத வேண்டியிருக்கிறது? என்க்கு ஏனோ திடீரென்று இரு தினங்களாக ஜலதோசம் படுத்துகிறது.

ம் ஒரு நல்ல விசயம்..., இந்த வகை வைரஸ் இணையம் மூலம் பரவுவதில்லை :-)
posted by சாகரன் @ 8/21/2004 06:22:00 PM  
2 Comments:
  • At 9:22 PM, Blogger சுந்தரவடிவேல் said…

    நான் மிளகுத்தூள், மஞ்சள் நிறைய போட்டு நிறைய சூப் குடிப்பேன்!!

     
  • At 12:00 PM, Blogger சாகரன் said…

    நன்றி சுந்தர்,

    வீட்ல சொல்லி செஞ்சு குடுக்கச் சொல்றேன்...
    (அவங்களுக்கு தெரியுமா இல்லையா தெரியாது...!!)

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER