சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, August 01, 2004
எப்ப தூங்கறது?
தூக்கத்திற்கும் மனித உடலின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக மருத்துவம் சொல்கிறது!

இது ஒரு மருத்துவக்கட்டுரை அல்ல... மருத்துவ ரீதியாக என்ன பலா பலன்கள் என்று நான் எழுத்ப்போவதில்லை... தெரியவும் தெரியாது..!!

நான் எழுதுவது வேறு விதமானமானது.....

இரவு நெடுநேரம் முழித்திருப்பதும் காலை நேரம் கழித்து சூரியன் சுட்டெரிக்கும் நேரம் விழிப்பதும் இன்று பலருடைய பழக்கம். என்னை உட்பட... இது சரியா என்பதில் எனக்கும் கேள்விகள் உண்டு. தவறு என்று பற்பல நண்பர்களும் நல்லுறவுகளும் புத்தகங்களும் கூறினாலும், தொடருவதில் இடர்பாடு ஏற்படுகிறது என்பது தான் உண்மை.

எந்த ஒரு பழக்கமும் பழக்கமாக மாற 14 நாட்கள் போதும் என்பார்கள்..! அதாவது... 14 நாட்கள் தொடர்ந்து ஒரு பழக்கத்தினை செயல்பாட்டில் கொண்டுவந்தால்... அது நம்மோடு என்றும் இருக்கக்கூடியதாக மாறிவிடுகிறது.... அதே சமயம் தொடர்ந்து இரண்டு அல்ல்து மூன்று நாட்கள் ஒரு பழக்கத்தில் இடைவெளி விட்டால்... அதைத் தொடருவது மறந்துவிடுகிறது..!!

ஒவ்வொருவருக்கும் பழக்கங்களும் மறந்தவைகளும் என்று பட்டியலிட்டால் எத்தனையோ வரும்... அவற்றைப்பற்றி பின்னர் குறிக்கலாம்...

எத்தனையோ முறை... காலை 6 மணிக்கு எழுந்திரிப்பது என்ற பழக்கத்தில் கொண்டுவந்து பின்னர் அது முடியாமல் போனது இப்போது மனதிலாடுகிறது.... ஒவ்வொரு வருடமும் முதல் தேதியில் இந்த விசயத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்று நினைப்பது உண்டு.

இரவு விழிப்பதிலும் சில அட்வாண்டேஜ்கள் இருக்கத்தான் செய்கின்றன... பல நாட்களில் இன்று செய்ய வேண்டும் என்று குறித்து வைத்த சில விசயங்களை செய்ய முடியாமல் போகிறது. அவற்றை முடிப்பதற்கான நேரமாக இரவு தான் கிடைக்கிறது. குழந்தையும் துணையும் உறங்கியபிறகு அமைதியான இரவில் உட்கார்ந்து கொண்டு கணிணியில் வேலை செய்வதோ அல்லது ஏதேனும் படிப்பதற்கோ அந்த நேரம் தான் தோதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்களில் காலையில் எழும் பொழுது ஏண்டா முழிச்சிக்கணும்னு தோன்றுவது தவிர்க்க முடியாததே..!!

சில தினங்களில், இரவு சீக்கிரம் படுத்து காலையில் சீக்கிரம் எழுந்து 'விடிவெள்ளி' பார்த்து எதை செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ அதை செய்ய முடிகிறது... அந்த நாள் உண்மையில் இனிமையாகத் தான் செல்கிறது என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள முடிகிறது.

கிட்டத்தட்ட குழப்பமாகத்தான் இந்த பதிவை முடிக்கப் போகிறேன். எது சரி என்பதில் எனக்குத் தெளிவில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் அது செல்லட்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. இல்லையென்றால் கணிணி துறையினருக்கு இப்படி இருப்பது சகஜம்தான் என்று சப்பை கட்டு கட்ட வேண்டியதுதான்.
posted by சாகரன் @ 8/01/2004 11:11:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER