சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, July 10, 2005
அந்நியன்
"அரே யார்.. who said there is no freedom in india pakistan?"

பக்கத்தில் இருந்த பாகிஸ்தானிய நண்பன் பிலால் குரைஷி கேட்ட நேரம், ஒன்-வேயை கிராஸ் செய்துகொண்டிருந்தேன். கூட்டம் அதிகம் இருந்த ஈகா தியேட்டரின் அருகிலிருந்த அந்த ஹோட்டலிலிருந்து மீண்டும் தியேட்டருக்கு வர வேண்டும். மறுபடி ஒரு முழு சுற்று சுற்றி வந்துவிடலாம் தான். ஆனாலும், ஏனோ அதே வழியில் ஓரமாகத் திரும்பி வந்து தியேட்டரில் என் இருசக்கர வாகனத்தைப் பார்க் செய்தேன்.

அவன் கேட்ட கேள்விக்கு 'ஹும்' என்ற பதில் மட்டுமே கொடுத்திருந்தேன். ஆனால் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் என்ற யோசிப்பு வந்தவண்ணம் இருந்தது. ஒன் - வே கிராஸ் செய்ததை வைத்து சுதந்திரத்தை எடை போட முடியுமா? இந்த சிறு தவறுக்கு இவ்வளவு பெரிய கேள்வி அதிகமில்லையா?!

தியேட்டரில் ஒரு ஓரத்தில் நின்ற பர்தா பெண்களைப் பார்த்து, ' நான் ஒரு நிமிடம் சவுதி என்று நினைத்துவிட்டேன்' என்று பிலால் சொல்ல, துணைக்கும் எனக்கும் மெலிதாக சிரிப்பு வந்தது.

பஹேலி - அறுவை. ( ஒரு வேளை உணமையிலேயே அந்த 'காதல் பூத்' பைக்குள் அடைபட்டுக் கிடந்திருக்குமானால், கொஞ்சமாவது அர்த்தம் இருந்திருக்கும்; அல்லது இவ்வளவு காலம் கழித்து கூடு விட்டு கூடு பாய்வதற்கு பதில், ஆரம்பத்திலேயே கூடு பாய்ந்திருந்தால், நமக்கு இப்படி ஒரு படம் பார்க்கவேண்டிய தேவையாவது இல்லாமல் இருந்திருக்கும்.)

இரவு, நேரம் 1 மணியை நெருங்கியபிறகு, ஆட்டோக்களை நம்பி பிலாலை அனுப்ப மனம் வரவில்லை. போதா குறைக்கு பாகிஸ்தானியன் என்று தெரிந்தால் இன்னமும் பிரச்சனை அதிகம் ஆகலாம். ஈகாவிலிருந்து அண்ணா நகர் MRF கெஸ்ட் ஹவுஸ் செல்லும் வழி தெரியாதுதான், இருந்தாலும், யாரிடமாவது கேட்டுச் சென்றுவிடலாம் என்று தோன்றியது.

"சார்.. இங்கேர்ந்து கே-4 போலீஸ் ஸ்டேஷன் எப்படி போறது? "- வழியிலிருந்த போலீஸ்காரரை நெருங்கி கேட்டேன்.

"நேரே போங்க சார். அப்புறம் ஒரு சிக்னல், அதையும் தாண்டி நேர போனீங்கண்ணா அடுத்த சிக்னல் வரும், நீங்க நேரே தான் போகணும்.அது ஒன்வே. இப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லை. அதனால நேரயே போகலாம்... ...." - தொடர்ந்து முழு வழியையுமே விளக்கமாகச் சொன்னார் அவர்.

போலீஸ் எவ்வளவு உதவியானவர்கள் என்பதைக் குறித்து பேசியவண்ணம் அவர் சொன்ன வழியில் செல்ல, எம்.ஆர்.எப் கெஸ்ட் ஹவுஸ் நெருங்கியது. உம்... அதை மாளிகை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு மணி நேரம் அவனோடு பேசியிருந்துவிட்டு திரும்பியபோதும் கூட...

ஆளில்லாத அந்த ரோட்டில், ஒன்-வே சிக்னலை மதித்து, ஏனோ சுற்றிக்கொண்டுதான் சென்றேன்.

தேவை ஒரு அந்நியன்?!


-------*-----------*----------
28ம் திகதி ஜூன் மாதம் 'தி ஹிந்து' இதழிலிருந்து..
"Two seamers from Saudi Arabia — Bilal Quereshi and Sufyan — are also training along with a bunch of Indian bowlers chosen from the country. "
posted by சாகரன் @ 7/10/2005 05:14:00 PM  
1 Comments:
  • At 1:48 AM, Anonymous Anonymous said…

    (11.7.2005) Visitor said...

    >>ஒன் - வே கிராஸ் செய்ததை வைத்து சுதந்திரத்தை எடை போட முடியுமா//

    :-)

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER